Wednesday, August 26, 2015

வேதாகம கேள்வி-பதில் போட்டி
 I. இந்த வார கேள்விகள்:  26 ஏப்ரல் 2015.
********************************************************
.
1. அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், கொடிய பஞ்சம் வந்த
   போது எதை சேகரித்து யூதேயாவிலுள்ள சகோதரருக்கு
   கொடுத்தனுப்பினார்கள்?
.
2. வெளிப்படுத்தின விசேஷத்தில், வெட்டுக்கிளிகள் எத்தனை
   மாதமளவும் மனுஷரை சேதப்படுத்துவதற்கு அதிகாரம்
   உடையவைகளாயிருந்தன?
.
3. இஸ்ரவேலிலே நியாயந்தீர்ப்பது அரிதாயிருந்தால் யாரிடத்தில் போய்
   விசாரிக்க வேண்டும் என்று மோசே கூறினார்?
.
4. தானியேல் கண்ட தரிசனத்தில் எத்தனை மிருகங்கள் காணப்பட்டது?
.
5. மோசே கற்பலகைகைளை உடைத்தப்பின்பு எத்தனை கற்பலகைகளை
    வெட்டிக் கொண்டு வரும்படி தேவன் கூறினார்?
.
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற
வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
.

குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய
பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை
சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.
.

கடந்த 19 ஏப்ரல் 2015. கேள்வி பதில்கள்:
.
.

1. ஸீலோவாம் என்பதற்கு என்ன பொருள்?
.
சரியான பதில் : அனுப்பப்ட்டவன் யோவான் 9:7
2. எரேமியா தீர்க்கதரிசியை தண்ணீரில்லா உளையான துரவிலிருந்து தூக்கி உதவி செய்தவன் யார்?
.
 சரியான பதில் : எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் .
எரேமியா 38:12,13
3. பவுலோடு கப்பற்சேதத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
.
சரியான பதில் : 276 பேர்  அப் 27:37
4. பூலோகத்தில் சாட்சியிடுகிற மூன்று யாவை ?
..
சரியான பதில் : ஆவி, ஜலம் , இரத்தம் (1யோ. 5.8)
.
5. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்

 
    என்று புதிய ஏற்பாட்டில் கூறியிருக்கும் பழைய ஏற்பாட்டு விசுவாசி
    யார்?
.
சரியான பதில் : ஏனோக்கு (யூதா 15 )

No comments:

Post a Comment