Disciples asked two things to Jesus - what shall be the sign of thy coming, and of the end of the world? Otherwise what shall be the sign of the end of this age (Grace Period) and what shall be the sign of the end of the world? Jesus mentioned few things -
1. Many shall come in my name, saying I am Christ;
2. You shall hear of wars and rumours of wars
3. Nation shall rise against nation, kingdom against kingdom.
4. shall be famines, pestilences, earth quake, tsunamy in diverse places
5. Ye shall be hated of all nations, for His name sake
6. Many shall be offended & shall betray one another
7. False prophets shall arise
8. love of many shall be wax cold because iniquity shall increase
9. Gospel of the kingdom shall be preached all over the world.
These are few signs of the end of this age or His secret coming (Mat.24:1-14). However, there are many other signs for the end of this world.
John the apostle heard a voice in the Isle of Patmos, "Let us be glad and rejoice and give honour to him: for the marriage of the Lamb is come, and his wife hath made herself ready(Rev.19:7,8). Many Christians have no proper understanding about the bibe subjects. We are called not for the marriage supper, but to become His Wife (Rev.21:9,10). While Noah, Abraham, Jacob, Moses, David, Samuel, Daniel, and even John the baptist will be in the marriage supplier of the Lamb (Jn.3:29; Mat 11:11), New Testaments perfected saints (Rev.12:5) will be His Bride. For you it may seems something strange, but the fact is this.
On the day of the LORD the heavens being on fire shall be dissolved and the elements shall melt with fervent heat and a recreated heavens and an earth will be appeared for a thousand years reign (2 Pet.3:12,13). This is the one sign of the end of this world.
We have a 4 days Bible Study from 29th October, 2014 to 2nd November, 2014 daily at 6.00 p.m. at Corporation Ground, Opp. St. Charles School, Near Lingarajapuram Fly Over, Bangalore 560084. Entry free and we well come one and all in the sweet and loving Saviour Jesus Christ. Invitation Notice is attached. Come and hear the counsel of God and prepare yourself as His Bride. If you are far away, try to obtain the CD of the bible study.
DOCTRINE OF TRUTH is dedicated to help all desiring souls to make themselves as the Bride of Christ and many are being blessed by it. Where the Bridegroom, there His Bride will be. That is a unique place in eternity called Zion & New Jerusalem. Saints of other ages cannot go to that place and hence we strongly preach & teach that 144000 standing on the Mount Zion is not Israelite (Rev.14:1-5). Following fresh sermons have been uploaded and you may visit at
Wednesday, October 29, 2014
ஒர் பள்ளியின் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுத்தர விரும்பினார். அவர் அனைத்து மாணவர்களையும் ஒரு பிளாஸ்டிக் பையை வாங்கச்சொன்னார்.
அந்த மாணவர்களிடம்... உங்களுக்கு எத்தனை மாணவர்களின் மீது வெறுப்பு உள்ளதோ அத்தனை உருளைக் கிழங்குகளை போடச் சொன்னார். மாணவர்களும் அப்படியே செய்தனர். சில மாணவர்கள் இரண்டு உருளைக்கிழங்குகளும் ஒரு சிலர் 3 முதல் 5 உருளைக் கிழங்குகளைப் போட்டனர்.
அந்த உருளைக்கிழங்கு பையை நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு வாரம் உங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார், மாணவர்களும் அப்படியே உற்சாகமாக செய்ய ஆரம்பித்தனர். முதல் இரண்டு நாட்கள் ஆர்வமாகச் செய்ய ஆரம்பித்த மாணவர்கள், பிறகு அவர்களுக்கு அதை எடுத்துச் செல்வது சிரமமாக எண்ணினர். மேலும் உருளைக்கிழங்கு அழுக ஆரம்பித்ததால் துர்நாற்றமும் ஏற்ப்பட்டது. எப்படியோ ஒருவாரம் உருளைக் கிழங்குகளுடன் கழித்து விட்டனர்.
ஆசிரியர் அனைத்து மாணவர்களிடத்தும் கருத்தைக் கேட்டார். அனைவர்களும் ஒரே பதில் தான், நாங்கள் இதனால் சிரமத்துக்குள்ளா னோம் இதனுடைய துர்நாற்றமும், சுமந்துகொண்டு செல்வதும் மிகவும் சிரமமாக இருந்தது ஐயா என்று தெரிவித்தனர்.
அதற்கு ஆசிரியர் இப்படித்தான் நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்பும் நம் மனபாரத்தை அதிகரிக்கும், நம் மனதை கெடுத்துவிடும் (துர்நாற்றம்) இது நம்மை நாமே கெடுத்துக் கொள்ளும் ஒரு செயல். எனவே இந்தப் பையைத் தூக்கிக் குப்பையில் வீசி எறிவது போல் பிறர் மிது வைத்திருக்கும் வெறுப்பை மனதிலிருந்து தூக்கி எறிவோம். மனதைச் சந்தோசமாக வைத்து அனைத்து செயல்களிலும் வெற்றியும் காணுவோம் என்றார் அசிரியர்.
(Eph 4:31 [Tamil])
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. Bible.
பதுளையில் பாரிய மண்சரிவு பலர் பலியாகியிருக்கலாம் என சந்தேகம்!- இதுவரை பத்து சடலங்கள் மீட்பு
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 03:52.23 AM GMT ]
பதுளையில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிக்குண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பகுதியில் மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நான்கு லயன்கள் முற்றாக மண் சரிவினால் மூடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=Um47YUNgQmU
மண் சரிவில் சிக்குண்டவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
(இரண்டாம் இணைப்பு)
இதுவரை பத்து சடலங்கள் மீட்பு
பதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மிரியாபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற மண் சரிவில் இதுவரை, உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்! ஜனாதிபதி உத்தரவு
பதுளையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவசர கால நடவடிக்கை ஒழுங்கு விதிகளின் பிரகாரம், அப்பகுதி பேரிடர் முகாமைத்துவ அதிகாரியை மீட்புப் பணிகளுக்கான தலைமை அதிகாரியாக செயற்படுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதேசத்தின் பொலிஸ், இராணுவம் மற்றும் அனைத்து அரச அலுவலகங்களும் அவரது பணிப்புரையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவ கமாண்டோக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் விசேட கமாண்டோ படைப்பிரிவின் இரண்டு பட்டாலியன்கள் விசேட ஹெலிகொப்டர்கள் மூலமாக பதுளைக்குத் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை
பதுளை ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியாபெத்த என்னும் இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் மண் சரிவில் மூழ்கியுள்ளன.
இதுவரையில் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மண் சரிவில் புதையுண்ட பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை.
மண் சரிவில் உயிர் தப்பியோரின் கண்ணீர்க் கதை! 300இற்கும் மேற்பட்டவர்கள் எங்கே?
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 11:05.37 AM GMT ]
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர். இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் 300இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை, மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக, இராணுவத்தினர் மற்றும் கடற்படை வீரர்கள் 500 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பியவர்கள் கூறிய கண்ணீர் கதை இது, மண்சரிவில் நேரில் சிக்கிய எம். மகேந்திரன் என்பவர் கூறுகையில், காலை 7 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. நாங்கள் தப்பியோட முயற்சிக்கும் போதே மண்சரி ஏற்பட்டு விட்டது. எப்படியாவது ஓடி தப்பியோடிவிடலாம் என்று நினைத்தோம் முடியாமல் போய்விட்டது. சுமார் 500 பேர் இதில் சிக்கியிக்கலாம். எனது குடும்பத்தில் 9 பேர் இருந்தனர் என்றார். எம்.ராதா என்ற பெண் கூறுகையில், காலையில் திடீரென மண்சரிந்தது. ஒரு சத்தத்தை மட்டுமே எங்களால் கேட்க முடிந்தது. இடுப்பு கீழே முற்றாக மண் முடிவிட்டது. சில ஆண்கள் மண்ணை வெட்டி அகற்றி என்னை காப்பாற்றினர் என்றார். மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், காணாமல்போனவர்களில் அதிகமானோர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லைனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதிக்கு அதிகாரிகள் அனைவரும் வருகை தந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்றுள் கொண்டிருப்பதாகவும் கொஸ்லந்தப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொத்மலையில் மண்சரிவு அபாயம்! 400 பேர் இடம்பெயர்வு http://newstamilwin.com/show-RUmszBTVKXjv5.html
பதுளையில் பாரிய மண்சரிவு பலர் பலியாகியிருக்கலாம் என சந்தேகம்!- இதுவரை பத்து சடலங்கள் மீட்பு பதுளையில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிக்குண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பகுதியில் மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் நான்கு லயன்கள் முற்றாக மண் சரிவினால் மூடப்பட்டுள்ளது. மண் சரிவில் சிக்குண்டவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. (இரண்டாம் இணைப்பு) இதுவரை பத்து சடலங்கள் மீட்பு பதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மிரியாபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற மண் சரிவில் இதுவரை, உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்! ஜனாதிபதி உத்தரவு
பதுளையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவசர கால நடவடிக்கை ஒழுங்கு விதிகளின் பிரகாரம், அப்பகுதி பேரிடர் முகாமைத்துவ அதிகாரியை மீட்புப் பணிகளுக்கான தலைமை அதிகாரியாக செயற்படுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதேசத்தின் பொலிஸ், இராணுவம் மற்றும் அனைத்து அரச அலுவலகங்களும் அவரது பணிப்புரையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவ கமாண்டோக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் விசேட கமாண்டோ படைப்பிரிவின் இரண்டு பட்டாலியன்கள் விசேட ஹெலிகொப்டர்கள் மூலமாக பதுளைக்குத் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை
பதுளை ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியாபெத்த என்னும் இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் மண் சரிவில் மூழ்கியுள்ளன.
இதுவரையில் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மண் சரிவில் புதையுண்ட பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை.
மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதியில் மக்கள் தங்களின் கடமைகளுக்கு செல்ல ஆயத்தமான நேரம், மாணவர்கள் எதிர்கால நோக்கத்தை அடைய துடிக்கும் நேரம், தாய்மார்கள் பிள்ளைகளுக்கு உணவை தயாரித்து கொடுத்து மகிழ்ந்த நேரம்,
கால நிலையில் குளிர் குறைந்த பிரதேசம். ஆனால் மலைகள் நிறைந்த பகுதியின் முடிவு பிரதேசம். இங்கு நடைபெற்ற கோர சம்பவம் உங்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பது உண்மை.
இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட வம்சவளி மக்கள் சமதரையில் இருந்து காடுகளையும் மலைகளையும் ஒவ்வொன்றாக உடைத்து காடழிப்பில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களின் வசதிகளுக்காக மலைப் பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு, இந்நிலங்களை பதப்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்து பயிர் செய்கையில் ஈடுப்பட்டனர்.
எம்மவரின் வரலாறு மிகவும் நீண்ட துக்கமும் ,துயரமும் கொண்ட வரலாறு. அப்போது கூட இந்த இந்தியவம்சவளி மக்களின் உழைப்புக்கள் தான் பயன்படுத்தப்பட்டது.
எம் மக்கள் முதலில் காலடி பதித்த இந்த இடத்தின் ஆரம்ப பகுதியிலேயே அவர்களின் வழித்தோன்றல் இன்றும் வாழ்ந்து வந்த பகுதிகளின் ஒரு திசையிலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆம் இலங்கையின் சரித்திரத்தில் இந்து கடவுளான முருகன் கூட இலங்கைக்கு வந்தபோது மிகவும் கவனமாக மலைப் பகுதியை தவிர்த்து கடல் பகுதியின் ஓரமாக வந்து கதிர்காமத்தை அடைந்தார்.
ஆனால் அவர் அங்கிருந்து பார்த்தால் முதலில் மலைப் பகுதியாக தெரிந்த பகுதிகள் இந்த மீரியபெத்த, கொஸ்லாந்தயாகும். அவரை தரிசிக்க செல்லும் மலையக மக்கள் கண்டி, நுவரெலியா, பண்டாரவளை, ஹப்புதளை பெரகலை கொஸ்லாந்த சென்று கதிர்காமம் செல்வார்கள்.
இது இந்தியா வம்சாவளியினரின் கதிர்காமம் செல்லும் வழி.
கொஸ்லாந்தயில் இருந்து பார்த்தால் கதிர்காமம் கடல் பகுதி வரை பார்க்கும் போது சமதரையாக தான் கண்களுக்கு தெரியும்.
அப்படிப்பட்ட புனித பிரதேசத்தை பார்க்க ,பேச தினசரி தரிசிக்க கூடிய இப்பகுதி மக்களை முருககன் கதிர்காமத்தில் இருந்து பார்த்தால் அவர் கண்ணுக்கு தெரியும் பகுதியாக கொஸ்லந்த பகுதியாகும்.
மதம் சார்பாக பார்த்தல் முருகப் பெருமானின் முக்கிய விழாவான சூரன் போர் நடைபெற்ற நாளில் இந்த கொடூர நிகழ்வு ஏற்பட்டது என்பது முக்கியமானதாகும்.
இதில் அதிக உயிர்கள் காவு கொள்ளப்பட்டது தமிழ் இனம், அவரால் முயற்சி முடியாமை எல்லாம் இந்த தமிழ் மக்களின் கடைசி செயலாகத்தான் இருந்திருக்கும்.
தங்கள் உயிர் காக்க இப்பொது நாம் சிந்தித்தால் இலங்கை தீவில் விடுதலைக்காக முயற்சித்த வடகிழக்கு தமிழினம் தங்களை காப்பாற்றிக் கொள்ள துடிதுடித்தார்களோ தங்களின் உயிரை காப்பாற்று, ஓடு ஓடு என்ற போதும் துடித்துடித்து மாண்டதோ அதே பாணியில் தான் இந்த சம்பவமும் ஒரு சில வினாடிகளில் மண்ணோடு மண்ணாக எல்லோரும் அல்லுண்டு போய் விட்டார்கள்.
அங்கு செல் தாக்குதல், புக்கார் விமான தாக்குதல், கொத்து குண்டு தாக்குதல்.
இங்கோ மண்சரிவு, வெள்ளப் பெருக்கு எவ்வாறு பார்த்தாலும் இவ்வாறான அனர்த்தங்களில் இறப்பது எல்லாம் நம் இரத்த உறவுகளே.
இன்று இலங்கை தேசத்திற்கு அந்நிய செலாவணியை அள்ளித்தந்த மக்கள் துடிதுடித்தும், அலறல் சத்தத்துடனும் ஆத்மா உடலைவிட்டு பிரிந்து போன நாள் அனைத்தும் அந்த சூரன் போர் போல் நூற்றுக்கணக்கானவர்களை பலி கொண்டு விட்டது.
இது இயற்கையின் எதிர்பாராத கொடூரம் சம்பவம் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல, இது செயற்கையின் கொடூரம். ஆம் இவர்களுக்கு இவ்வாறான நிலைவரும் என்று 2005 ஆம் ஆண்டே தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தின் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தோட்ட நிர்வாகம் இது குறித்து அக்கறை கொள்ளவில்லை என அரசாங்கம் தோட்ட நிர்வாகம் மீது பழி சுமத்துகின்றது.
ஒரு நாட்டில் வாழும் மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள வேண்டியது தோட்ட நிர்வாகமா? அல்லது அரசாங்கமா? அப்படி பெருந்தோட்ட மக்கள் மீது தோட்ட நிர்வாகம் தான் அக்கறை கொள்ள வேண்டும் என்றால் அப்போது அரசாங்கம் எதற்கு?
கொஸ்லாந்த பகுதியின் அபாய நிலையை அறிந்த அரசு இவர்களுக்கு மாற்று வீடு கொடுத்ததாக அல்லது மாற்று நிலங்களை கொடுத்ததா? இல்லை.
28ம் திகதி வரை இம்மக்களின் வருமானத்தை உறிஞ்சி அந்நிய செலவாணியை பெற்று இந்த அரசும் அதற்கு துணைபோனவர்களும் இந்த இதய குமுறல் என்றும் எப்போதும் கேட்கப் போவதில்லை.
ஏன் என்றால் இவர்களுக்கு வாக்களித்தால் தம்மை வாழ வைப்பார்கள் என்று நம்பிய சமூகமே இந்த மலைநாட்டான் அல்லது தொட்டக்காட்டான் என்று கூறப்படும்.
உழைத்து உழைத்து உணவின்றி, உடுத்த உடையின்றி உறைவிடம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக சமூகம் இவர்களின் இறந்த உடல் இன்று மண்ணோடு புதைந்து விட்டது. அதற்கு 30 அடிக்கு மேல் மண் நிரம்பிவிட்டு.
இதை அரசும், அரசாங்கமும் நிச்சயம் பயன்படுத்தும் எப்படி என்றால் மர நடுகை திட்டம் ஆம் தமிழ் தோட்ட தொழிலாளி இருந்தாலும் அவன் உழைப்பில் அந்நிய செலாவணி இறந்தால் அவன் உடல் மேல் மரத்தை நட்டு, நாட்டிய மரத்திற்கு அவன் உடம்பு உரமாகப் போகின்றது. இது உண்மை.
இறந்த உடல்கள் இதுவரை தேயிலை செடிகளுக்கு உரமாக்கப்பட்டது. இனி மரங்களுக்கு உரமாக போகின்றது.
இதேபோல் தான் வட கிழக்கில் உயிர் நீர்த்த பலரின் உடலுக்கு மேல் மரங்கள் நாட்டப்படலாம் அல்லது நாட்டப்பட்டு இருக்கலாம்.
இவைகளை சற்று சிந்தித்துப் பார்த்தால் தமிழினம் வாழ்ந்தாலும் இறந்தாலும் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பாவ ஜென்மமாகவே இருக்கின்றது.
பண்டைய காலம் முதல் இன்றுவரை ஏன் இந்த துயரம் தமிழினத்தை தொடர்கின்றது என்பது புரியாத ஒன்றே.
இறந்தவர்கள் தமிழினம் ஆகவே அவர்களில் தப்பி பிழைத்தவர்கள் பகுத்தறிவாளனாகவோ அல்லது விழிப்புணர்வுடன் வாழ்ந்துவிட வழிவகுக்க கூடாது என்பதனாலேயோ என்னவோ வெளிநாடுகளில் இருந்துவரும் மனித நேய உதவிகளை கூட அரசாங்கம் புறம்தள்ளி இவர்களின் வாழ்வை எப்படி சூனியமாக்கலாம் என்ற எண்ணத்துடன் எப்பொழும் செயற்படுகின்ற இனவாதிகளை நாம் இப்பொழுதும் பார்க்கலாம்.
ஆகவே சகல அபிவிருத்திக்கும் வெளிநாட்டு உதவியை பெரும் இந்த ஆட்சியாளர்கள் இந்த வறுமை கொட்டிற்கு கீழ் வாழும் சமூகத்தில் தாய், தந்தை உறவினர்கள் என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் சிறார்களின் எதிர்காலத்திற்கு உதவிவரும் மனித நேயங்களைக்கூட மறுக்கும் புண்ணியவான்களாக சித்தரிக்கும் இனவாதிகளை இன்னும் இன்னும் காணாது இருக்கும் அரசியல் தலைமைகள் புத்திஜீவிகள் சமூக நல சிந்தனையாளர்கள் மௌனம் காப்பது ஏன்?
ஐ.நா சபையின் உதவியைக்கூட மறுப்பதற்கு காரணம் இந்த உதவி தமிழனுக்கு கிடைக்க கூடாது என்பதற்காவா? இது விதியா?
இல்லை விடுதலைக்கான வித்தா? தமிழ் சமூகமே உனக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை வீசி ஒன்றுபடு. இறந்தவர்கள் இறந்தவர்களாக இருக்கட்டும் இது முடிந்த கதை.
ஆனால் ஆரம்பிக்க வேண்டியது இனியாவது சமூகம் என்ற அடிப்படையில் ஒன்றுபடு. எமது உடலின் மீது பசுமை என்ற பெயரில் நாட்டப்படும் மரமும், அபிவிருத்தி என்ற போர்வையில் போராடப்படும் பாதைகளும் கட்டிடங்களும் அதனை பயன்படுத்தி எதிர்கால தமிழினத்தின் வாழ்வை சுபீட்சமாக்கு இது உயிரிழந்த ஆத்மாவின் அன்பான வேண்டுகோள்...
துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும் : தமிழ் சிவில் சமூக அமையம்
நேற்று முன்தினம் கொஸ்லந்தைப் பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு எமது இரங்கல்களைத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வனர்த்ததினால் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவர்களின் துயரத்திலும் உணர்வு பூர்வமாகப் பங்கேற்கிறோம்.
இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கியிருக்கும் மலையகத் தமிழ்ச் சமூகம் இரட்டை அடக்கு முறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகமாகும். உழைக்கும் வர்க்கமாகக் கடுமையான பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்பட்டுள்ள இச் சமூகம், அதற்கு மேலதிகமாக கொடூரமான இன ஒடுக்கு முறைக்கும் உள்ளாகி வருகிறது. சுதந்திர இலங்கையின் முதலாவது இன ஒடுக்கு முறை, பிரசாவுரிமைச் சட்டம் எனும் வடிவத்தில் இவர்கள் மீதே பிரயோகிக்கப் பட்டது. காலத்திற்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரங்களிலும் இவர்களின் உயிர்கள் கொத்துக் கொத்தாகப் பறிக்கப் பட்டன.
ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் ஒரு சமூகம் என்ற வகையில், மலையக மக்களின் துன்ப துயரங்களை நாங்கள் ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்கிறோம். அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த மலையக மக்களின் வாழ்க்கையில், இவ்வியற்கை அனர்த்தம் ஒரு பேரவலத்தை விளைவித்துள்ளது. இப் பேரவலத்திலிருந்து அவர்களது ஆன்மாவில் உறைந்துள்ள உறுதியினால் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
அதேவேளை மலையகத் தமிழ் சமூகம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தினது பாராமுகத்தன்மையை இங்கு சுட்டிக்காட்டி இம்மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழி செய்ய வேண்டிய அரசாங்கத்தினது கடமையை வலியுறுத்த விரும்புகிறோம். இன்னும் மலையக தமிழ் அரசியல் சக்திகள் சுயநலம் தவிர்த்து தம்மக்களது உண்மையான மேம்பாட்டிற்காக உழைக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எம்மைப் போலவே அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து மலையகத் தமிழ் சமூகம் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப் பட்டுள்ள இந்த வேளையில், அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு உள்ளது. இவர்களுக்கான அவசர, மனிதாபிமான உதவிகளை ஒழுங்கு படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் வேண்டிக் கொள்கிறோம். முன்பும் இவ்வாறான வேளைகளில் மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைத்து நடாத்திச் சென்ற பல்கலைக் கழக சமூகம், இம்முறையும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருப்பதை நாம் வரவேற்று, அவர்களுடன் எமது கரங்களையும் இணைத்துக் கொள்கிறோம். இப்பணியில் யாழ். பல்கலைக் கழக சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் நாம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.
ஒரு சில கணங்களுக்குள் இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் : எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.
இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.
புன்னகை தவழ மகிந்த
மலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.
யார் இவர்கள்? ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?
கொஸ்லந்த
இலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் ‘இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்’ எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது.
அரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது?
உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி ‘நீ வேறெங்காவது போ’ எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது? ஜீவனோபாய வழி முறைகள்.
கமராக்களின் முன்னால் பார்சல்களை வழங்கும் மகிந்த
காலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை? அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.
இவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல !
கல்வியால் கற்றோர் சமூகத்தால் மலையகம் முன்னேறும், மீட்சியடையும் என்பது புத்திஜீவிகளின் கருத்து. இது எந்தளவுக்கு உண்மையானது? நடைமுறை சாத்தியமானது? எனும் சந்தேகத்தினையும், கேள்வியையும் ஓர் சம்பவம் ஏற்படுத்தியது. அதனை உங்களோடு பகிர்ந்துக் கொண்டு மலையக மீட்சி தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்காக இந்த ஆக்கத்தினை வரைகிறேன்.
நுவரெலியா மாவட்டம், இராகலை- சென்லெனாட்ஸ் தோட்டம் என்றால் பொதுவாக மலையகத்தில் அதிகமான ஆசிரியர் சமுகத்தினைக் கொண்ட ஓர் தோட்டம் என தெரியும் இங்கு ஐந்நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்களும் வேறு பல உயர் தொழில் செய்வோரும் மற்றும் மூளைசார் தொழில், உடல் சார் தொழில் செய்வோரும் உள்ளனர்.
தீபாவளி நாளன்று எல்லோரையும் போலல்லாமல் நான் வீட்;டுக்கு பயணிக்கும் கொங்கிரீட் இடப்பட்ட பாதையின் இரு பக்கங்களிலும் நீர் தேங்கி நின்ற இடங்களுக்கு கல், மண் இட்டு நிரப்பியதுடன் பூக்கன்றுகளையும் நாட்டி, பக்கத்திலிருந்த கால்வாயில் நீர் தேங்கி நிற்காமல் குப்பைகளை அகற்றியவாறு வேலை செய்து கொண்டிருந்தேன். வழமையாக இதை செய்வதுண்டு.
அதே வீதியில் எனது வீட்டைக் கடந்து 25 மீற்றர் தூரத்தில் ஆரம்பக் காலம் தொட்டு நன்கு அகலமான, வாகனங்கள் திருப்பக் கூடிய விளையாடும் இடம் (மைதானம் அல்ல) இருந்தது. தற்போது அவ்கொங்கிரீட் இடப்பட்ட 8 அடி பாதையளவிற்கு சுருக்கப்பட்டு, நகரும் வேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு, வாகனங்களை திருப்ப முடியாமல், விளையாட முடியாமல் சிறிய இடமாக காணப்படுகிறது. எனது ஞாபகத்தில் நாங்கள் ஓடி விளையாடுவதும,; சைக்கிள் ஓட்டுவதும், கிரிக்கட் விளையாடுவதும் இந்த பரந்த இடத்தில் ஆனால் தற்போது அவ்விடம் சுருங்கிப்போயுள்ளது.
எவ்வாறாயினும் வேலியிலிருந்து 4 அடி தூரத்தில் கொங்கிரீட் வீதி செல்கிறது. அதனால் அந்த வீதியை அகலமாக்குவதற்காக ஃ உள்ள இடத்தையாவது பாதுகாத்துக் கொள்வதற்காக வீதியிலிருந்து 2 அடிக்கு வேலி பக்கமாக கல் நிரப்பி மண் இட சிறுவர்களுடன் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தப் போது மேலே கூறிய கற்ற ஆசிரியர் சமுகத்தை சார்ந்த கணவனும,; மனைவியும், தாயும,; தமையனும் வந்து சண்டையிட்டு கற்களை தூக்கி எறிந்தனர்;, விவாதித்தனர்;:
“உங்கள் இடத்தில் வேலை செய்யுங்கள் எங்கள் இடத்தை ஒன்றும் செய்யாதீர்கள்.”
“எல்லோரும் இடத்தினை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் பிடித்தால் உமக்கென்ன?”
“இங்கே வாகனம் திருப்ப இடம் தர முடியாது”
என இடைமறித்தனர்.
நான் கூறினேன் “சுமார் 60 வருடங்களுக்கு மேல் இவ்விடம் வாகனம் திருப்பும், பொது தேவைக்காக பயன்படுத்தும் இடம் நீங்கள் 75மூ ஆக்கிரமித்துக்கொண்டுள்ளீரகள்; மிகுதி கொஞ்ச இடத்தினை பொது நோக்கத்திற்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்கள் இது உங்கள் வேலியிலிருந்து 2 அடி தூரத்தில் உள்ளது. வேலியை ஒன்றும் நாங்கள் செய்யவில்லை உங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை இதற்கு இடம் தாருங்கள் அதில் உமக்கு என்ன பிரச்சினை” என.
அதற்கு அவர்கள் கூறியது “வேலி தற்காலிகமானது கொங்கரீட் வீதிதான் எங்களுடைய உண்மையான வேலி, எல்லோரும் இடத்தை பிடிக்கும் போது நாங்களும் பிடித்துள்ளோம.; எங்கள் வீட்டுக்கு முன்னால் வாகனம் திருப்ப இடம் தர முடியாது” எனக்கூறி இடைமறித்தனர்.
இருந்த வீதியில் வேலி இட்டுக்கொண்டு இப்போது உள்ள இடத்தையும் காப்பாற்ற முடியாமல் இருக்கையில் ஏனையோர் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். வாக்கு வாதம் அதிகமாகியது.
“எஸ்டேட் ஆக்கள் இப்படித்தான் இதனால் தான் இங்கு வேண்டாம் வேறு இடத்தில் வீடு வாங்கலாம், தோட்டக்காட்டான் புத்தியை காட்டி விட்டார்கள்”; என அந்த கற்ற ஆசிரியை (மனைவி) எங்களுக்கு கேட்கும் படி கூறினார். நிற்க, அந்த ஆசிரியையின் கணவர் தோட்டத்தொழிலாளியின் பிள்ளை, தேயிலை தளிர் கிள்ளிய பணத்தில்தான் கற்று 3179 ஆசிரிய நியமனத்தில் நியமனம் பெற்றார். அவ்வாசிரியை பின்தங்கிய உடபுஸ்ஸல்லாவை அலகொல்லை தமிழ் வித்தியாலயத்தில்ஃ தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்விகற்கும் பாடசாலையில் கற்பிக்கிறார். பொலிஸ் உதவியுடன் 2 அடி அகலத்திற்கு மண் நிரப்பப்பட்டது. வாகனங்களை ஓரளவு வேகமாக திருப்ப முடியுமாக இருக்கிறது என சாரதிகள் கூறினர்.
பொலிசார் இது நல்ல விடயம் பொது விடயம் தானே ஒத்துழைத்தால் என்ன என கேள்வி எழுப்பினர்.
வெட்கப்பட வேண்டியவர்கள் ஆவேசம் கொண்டனர். சட்டம் பற்றி பேசினர். நான் சிரித்துக்கொண்டே வந்து விட்டேன்.
இச்சம்பவம் எமக்கு சில கேள்விகளை தந்துவிட்டுச் சென்றுள்ளது.
1. கற்றோர் சமூகத்தால் மலையகம் மீட்சி அடையுமா?
2. கற்றோர் சமூகம் என்பது யாது?
3. ஆசிரியர்கள் சுயநலமாக செயற்படுவது மலையகத்தினை எவ்வாறு மீட்சியடையச் செய்யும்?
4. பொதுமக்கள் மௌனத்தின் விளைவு?
5. இவ்வாறு சிந்திக்கும், செயற்படும்; ஆசிரியர்கள் எவ்வாறு நல்ல மலையக சமுகத்தினை, பொது நோக்கம் கொண்ட மாணவர்களை உருவாக்குவர்?
6. தோட்டக்காட்டான் என அடையாளப்படுத்தும் இவர்களின் அடையாளம் என்ன?
7. அறியாமை, போதிய அறிவு இல்லாதவர்களை ஆசிரியர் தொழிலில் இணைத்தமை சரியா?
8. இதை மாற்ற நாம் என்ன செய்யலாம் ?;
9. மலையக மீட்சிக்கு நல்ல, பொது நோக்கம் கொண்ட சமுகத்தை உருவாக்கஃ கட்டியெழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும்?
10. எமது தார்மீகக் கட்டுப்பாடு என்ன? ……..
இன்னும் பல கேள்விகளை உங்கள் மனதிலும் ஏற்படுத்தலாம்.
கற்றோர் சமுகத்துள் ஓர் அமைப்பு ரீதியான பொது நோக்கத்திலான செயற்பாடுகள் இன்மை
கலை இலக்கிய ஆக்கப்படைப்புகள் இன்மை,
பிழையான சிந்தனை செயற்பாடு பழக்கங்கள்
சமூக சிந்தனை இன்மையும் சுயநலமும்
கல்வியும் சம்பளமும் சலுகையும் மக்களின் உழைப்பால் கிடைப்பவை என்பதை அறியாமல்; மாயைக்குள் வீழ்ந்திருக்கும் அவலம்
வாசிப்பும் தேடலும் இன்மை
தான், தன் குடும்பம், தன் பிள்ளை என சுருங்கிய வட்டத்துள் வாழும் நிலைமை
இன்னும் பல்வேறு காரணங்களினால் மலையகம் 1960 – 1970 களிலிருந்த விடுதலை, முன்னேற்றம் நோக்கிய பயணம் தடைப்பட்டு மீண்டும் முடங்கி கிடக்கின்றது.
இதற்கு யார் பொறுப்பு? இந்த சம்பவம் எமக்கு எதை உணர்த்துகிறது?
மலையகம் மீட்சி அடையுமா?
“ஒக்கத் திருந்தி உலகோர் – நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி”
“ஊருக்கு ழைத்திடல் யோகம் – நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்”
-பாரதி-
மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன - கொஸ்லாந்த மீட்புப் பணிகளில் மோப்ப நாய்கள்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 07:36.14 AM GMT ]
மலையகத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.
அத்தோடு காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியாகுவதோடு மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளது.
கொஸ்லாந்த மண்சரிவில் உயிருடன் புதையுண்டவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவுக்குள்ளான பிரதேசத்தில் மீட்புப் பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
நேற்றைய தின மீட்புப் பணிகளின் போது கூடுதலான இயந்திரங்கள் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டும் ஒரு சடலம் கூட மீட்கப்படவில்லை.
மீட்புப் பணிகளில் இராணுவத்தின் சுமார் 700 விசேட கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வான்படையின் விசேட எயார் மொபைல் பிரிகேட்டின் 52 விமானப்படை அதிகாரிகளும் மீட்புப் பணியில் துணை செய்கின்றனர்.
எனினும் எதிர்பார்த்தபடி சடலங்களை மீட்கும் பணியில் முன்னேற்றம் கிட்டவில்லை. இதனையடுத்து இன்று காலை முதல் மோப்ப நாய்களை ஈடுபடுத்தி மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தோர் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதை மண்சரிவு படம் பிடித்து காட்டுகிறது:மனோ கணேசன்
தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனத்தில் (National Building Research Organization) மண்சரிவு ஆய்வு அபாய நிர்வாக பிரிவு (Landslide Research & Risk Management Division) என்ற ஒரு அங்கம் இருக்கின்றது. கொஸ்லாந்தை, மீரியபத்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதால், அங்கு வாழும் மக்களை மாற்று இடங்களுக்கு இடம்பெயர செய்யுங்கள் என்ற அபாய எச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனம், மூன்று வருடங்களுக்கு முன்னர் 2011ம் வருடத்தில் தந்ததாக, அந்நேரத்தில் இடர் நிவாரண அமைச்சராக இருந்த மகிந்த சமரசிங்க இப்போது சொல்கிறார். இந்த தகவலை குறிப்பிட்ட தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்தாகவும் சொல்கிறார்.
மலையக மக்களின் அனைத்து வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் தோட்ட நிர்வாகங்கள் மாத்திரம்தான் பொறுப்பா? அபாய அறிவிப்பு வந்த போது உடனடியாக செயற்பட்டு, மாற்று குடியிருப்புகளை அமைத்து, இந்த தோட்ட மக்களை அப்புறப்படுத்தி, அபாயமில்லா இடங்களில் குடியேற்றும் எந்தவிதமான பொறுப்பும், இந்நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு, துறை சார்ந்த அமைச்சருக்கு, இந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்து இந்த அரசுக்கு உள்ளே இருக்கும் அரசியல்வாதிகளுக்கு, மாவட்ட செயலகத்துக்கு, பிரதேச செயலகத்துக்கு கிடையாதா? மலையக தோட்ட தொழிலாளர் இந்த நாட்டு தேசிய நீரோட்டத்தில் இல்லையா? இவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? என்ற கேள்விகளை மண்ணில் புதையுண்டு போன மக்கள் சார்பாக நான் எழுப்புகிறேன் என கொஸ்லாந்தை அனர்த்தம் தொடர்பாக முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கலந்துரையாடலின் போது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இங்கு மனோ கணேசன் தொடர்ந்து கூறியதாவது
முன்னாள் இடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க அப்படி சொல்லும் போது, இந்நாள் அமைச்சர் மகிந்த சமரவீர ஆச்சரியப்படத்தக்க கதை ஒன்றை சொல்கிறார். இந்த அனர்த்தம் நிகழ்ந்தவுடன் எத்தனை பேர் காணாமல் போயுள்ளார்கள் என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் செய்தியாளர்களால் கேட்கப்பட்டபோது, அவை தோட்ட நிர்வாக பதிவு அறையிலேயே இருப்பதாகவும், அந்த அறையும் மண்ணுக்குள்ளே போய் விட்டதாகவும் கூறுகிறார். இதன்மூலம் இந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள நடைமுறையை போல், மலைநாட்டில் மலையக மக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள், பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவகரிடமோ, பிரதேச செயலாளரிடமோ இல்லை என்று புலனாகின்றது.
இந்த சம்பவத்தை ஒரு மண்சரிவு அனர்த்த சம்பவமாக மாத்திரம் காட்ட சிலர் முயல்கிறார்கள். அனர்த்தத்தில் உயிரிழந்த, சொந்தங்களை இழந்த மக்களுக்கு அனுதாபமும், நிவாரணமும் தேவை. அது என்னிடமும் எக்கச்சக்கமாக இருக்கின்றது. ஆனால், அதை சொல்லி உண்மையை திரையிட்டு மறைக்க முடியாது. உண்மையை வெளியே கொண்டுவர எம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்வோம்.
உண்மையில் மலையடிவாரங்களிலும், மலைஉச்சிகளிலும் அமைந்துள்ள லயன் குடியிருப்புகளில் வாழும் நமது மக்களின் பரிதாப நிலைமைகளையே இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது. கொஸ்லாந்தை மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மலையக தோட்ட தொழிலாளர்களுக்கும், பாதுகாப்பான இடங்களில் காணிகள் பிரித்து வழங்கி, நவீன தனி வீடுகளை கட்டுவித்து, இந்த சமூகத்தின் வீட்டுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்தி நிற்கிறது. இது முதல் உண்மை.
அதுமட்டுமல்ல, திட்டமிட்ட முறையில் இந்த தோட்ட தொழிலாளர் சமூகம், இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதையும், இந்நாட்டு மாவட்ட, பிரதேச செயலக நிர்வாகங்களில் இருந்து இவர்கள் தூர இருப்பதையும் இந்த சம்பவம் படம் பிடித்து காட்டுகின்றது. இது இரண்டாம் உண்மை.
இத்தகைய ஒரு சம்பவம் இந்த நாட்டின் வட மத்திய மகாணத்திலோ, தென் மாகாணத்திலோ நடைபெற்று இருக்குமானால், இந்நேரம் முழு நாடுமே விழித்தெழுந்து, பின்னணி உண்மைகளை கண்டறிந்து இருக்கும். ஆனால், இது நடந்து இருப்பதோ 1800ம் ஆண்டுகளில் இருந்து கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்கள் என்பதால் அனுதாபம், நிவாரணம், தோட்ட நிர்வாகத்தின் மீதான விசாரணை என்று காலம் கடத்தப்படுகிறது.
உழைக்கும் மலையகத்து தோட்ட தொழிலாளர் தொடர்பான இந்த இரண்டு உண்மைகளையும், நமது இனத்து தாய்மார்களும், இளைஞர்களும், பெரியவர்களும், குழந்தைகளுமாக ஒரு இருநூறு சொந்தங்கள், நூறு அடி மண்ணிலே புதைந்து, உலகத்துக்கு உணர்த்தியுள்ளார்கள். இதுவே இங்கே பரிதாபம். இந்த தியாகம் வீண் போய் விடக்கூடாது. உண்மைகளை இந்நாடும், உலகும் அறிய வெளியே கொண்டு வரவேண்டும். மலையக மக்களையும், நல்லெண்ணம் கொண்ட ஏனைய மக்களையும், கொழும்பிலே வாழும் விழிப்புணர்வு மிக்க நமது இளைஞர்களையும், புலம் பெயர்ந்துள்ள நமது சொந்தங்களையும், சமூக உணர்வுள்ள ஊடகங்களையும் நான் துணைக்கு அழைக்கின்றேன்.
கொஸ்லந்த பெண்களுக்கு மாற்றுடைகூட இல்லை, அரசாங்கம் புறக்கணிப்பு
கொஸ்லாந்த மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு பூணாகலை தமிழ் மகாவித்தியாலய முகாமில் தஞ்சமடைந்துள்ளோரில் 76 பெண்களுக்கு மாற்றுடை இல்லாமல் அல்லலுறுகின்றனர் என்று அங்கிருந்து மனித அபிவிருத்தித் தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார்.
அவர் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தார். மக்களுடன் அளவளாவினார்.
உடுத்த உடையுடன் முகாமிற்கு வந்த இப்பெண்கள் கடந்த 3 நாட்களாக அதே உடுப்புடன் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
மேலும் 10 வயதுக்குட்பட்ட 27 சிறுமிகளுக்கும் மாற்றுடையில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் பெண்களுக்கு தேவையான சுகாதார ரீதியான உடைகள் மற்றும் பொருட்களை பிரதேச செயலகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவை இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது.
அவை முகாமிலுள்ள ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலசல கூடங்களிருந்தாலும் தண்ணீர் வசதி இல்லையென்றும் கூறப்படுகிறது. பொதுவாக முகாம் நிருவாகம் பாதிக்கப்பட்டவர்கள் நலன்கருதி செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்கிறது.
ஸ்ரீகாந் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்குள்ள நிலைமைகளை அவதானித்துவிட்டு கிழக்கிற்குச் சென்று தேவையான நிவாரணப் பொருட்களுடன் மீண்டும் இங்கு வந்து வழங்க விருக்கிறோம் என்றார்.
கொஸ்லந்த மீரியபெத்த மக்களின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஆராய்வு:சட்டத்தரணி இ.தம்பையா
கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல், அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 01.11.2014 அன்று ஹப்புத்தளையில் இடம்பெற்றது. பிரதேச அரசியல் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினர், சிவில் அமைப்புகள் மற்றும் பிரதேச மக்கள் பங்குகொண்ட இக் கலந்துரையாடலில் சிறப்புரை ஆற்றிய மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா மீரியாவத்தை மக்களின் உயிர் வாழும் உரிமை மீறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு நிபுணத்துவ சட்டத்தரணிகள், பொது அமைப்புகள், மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அவரின் உரையில் மேலும் குறிப்பிட்டதாவது;
அனர்த்தம் இடம்பெற்று பலநாட்கள் கடந்துள்ள நிலையில் காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை உறுதியாக அரசாங்கம் கூறவில்லை. மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு எண்ணிக்கைகள் ஊடகங்களில் சொல்லப்படுகின்றன. சரியான புள்ளிவிபரங்களை வழங்கவில்லை. உரிய அதிகாரிகள் மலையக மக்களுடன் தொடர்பான புள்ளிவிபரங்களை முறையாக பராமரிப்பதில்லை என்பது இதனூடாக வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் பெறப்படும் போதே நிவாரண நடவடிக்கைகளை முறைப்படுத்தி செய்ய முடியும். அத்தோடு அழிவுற்ற சொத்துக்களின் பெறுமதிகளையும் மதிப்பிட வேண்டியுள்ளது. அத்தோடு அரசாங்கம் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு தலா ஒரு இலட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும் சடலங்கள் அனைத்தும் எடுக்கப்படுமா என்ற நிலை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்கள் இழப்பீடுகள் பற்றி கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உண்டு.
அரசாங்கம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பொறுப்பேற்பதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளின் உளவியலை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களை அவர்களுடன் தொடர்பற்ற சூழலில் வைத்து வளர்க்கப்படுவது பொருத்தமற்றது. சிறுவர்களின் உறவினர்கள் அக்குழந்தைகளை பொறுப்பேற்க முன்வருவார்களாயின் அதற்கு வழிவிட வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் அச்சிறுவர்களை பொறுப்பேற்க விரும்பும் தொண்டுஃநற்பணி நிறுவனங்கள் முன்வரும் போது அதற்கு வழிவிட வேண்டும். அரசாங்கம் அதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் உதவிகளையும் செய்யலாம். அதுவே சிறுவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்றதாகும்.
மீரியபெத்த தோட்ட மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டும் மக்கள் செல்லவில்லை என்று மக்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மாற்று இடம் வழங்கப்பட்டும் அவ்விடத்தில் இருந்து செல்ல மக்கள் மறுத்திருப்பின் மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்க அரசாங்கம் பலவந்தப்படுத்தியேனும் அங்கிருந்து அகற்ற வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. ஏனெனில் அரசு மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. எனினும் அதிகாரிகள் அதனை செய்திருக்கவில்லை. எனவே இது தொடர்பாக பொறுப்புக் கொண்டுள்ள மஸ்கெலிய பெருந்தோட்டக் கம்பனி, தேசிய கட்டிடவியல் ஆய்வு நிலையம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், அனர்த்த முகாமைத்து அமைச்சு ஆகியவற்றின் உரிய அதிகாரிகள் தொடர்பாக விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறான விசாரணை எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுக்க வாய்ப்பளிக்கலாம்.
மீரியபெத்த அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களின் பேரால் அவர்களுக்கு உண்மையான கௌரவத்தை அஞ்சலியை செலுத்தும் வகையில் அனர்த்;தம் ஏற்படவாய்ப்புள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் வாழும் மலையக, சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைத்து மக்களினதும் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான மாற்று இடங்களில் தனி வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசியல், தொழிற்சங்க பேதங்கள் இன்றி அனைவருக்கும் உள்ளது. பொதுமக்கள் இவ்விடயத்தில் நிவாரணம் வழங்குவதுடன் நின்றுவிடாது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கும் தார்மீக பொறுப்பை கையேற்று செயற்பட வேண்டும் என வழியுறுத்தினார்.
அப்புத்தளை சைவ இளைஞர் மன்றம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ நிதியம் ஒன்று அன்றைய தினம் உருவாக்க தீர்மானித்துள்ளதாக மன்றத்தின் தலைவர் என். சின்னசாமி குறிப்பிட்டார். அத்தோடு மீரியபெத்த தோட்ட மக்களின் தகவல்களை திரட்ட தகவல் அமையம் ஒன்றை அமைப்பதற்கான பொறுப்பை சைவ இளைஞர் மன்றம் ஏற்றுக் கொண்டது.
2014 ஒக்டோபர் 29 ஆம் திகதி இடம்பெற்ற மீரியபெத்த மண்சரிவு சம்பவமானது இயற்கை அனர்த்தம் என்ற பெயரோடு மூடி மறைக்கப்பட்டு விட்டது.
ஆனால் உண்மையில் அது திட்டமிட்ட ஒரு படுகொலை சம்பவம் இப்படியான அனர்த்தம் இங்கு இடம்பெறப்போகின்றது என்பது மலையக பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் எவரும் அக்கறை எடுக்கவில்லை என அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கிறார்.
இச்சம்பவத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரையும் மண்ணுக்கு இரையாக்கி விட்டு தனிமரமாக நிற்கும் யோகராஜ் ஒரு சாரதியாவார் மீரியபெத்த அனர்த்தம் இடம்பெற சற்று நேரத்திற்கு முன்பு இவர் வீட்டை விட்டு தொழில் நிமித்தம் வெளியேறியுள்ளார் .இதன் காரணமாக இச்சம்பவத்தில் இவர் தப்பித்தார். இவரது மனைவி ,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என ஐந்து பேர் இச்சம்பவத்தில் மண்ணில் புதையுண்டு போனார்கள். மீட்பு பணிகளின் போது இவரது மனைவியின் கால் பகுதியும் பேரக்குழந்தையின் உடலுமே கிடைத்தன.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே வசித்து வரும் யோகராஜ் இரவு நேரங்களில் அந்த மலைப்பிரதேசத்தில் அலைந்து திரிந்து பின்பு இரவு வீடு வந்து தனது சொந்தங்களின் படங்களைப்பார்த்து அழுது நித்திரை இல்லாமல் இன்று வரை தவித்து வருகிறார். மேலும் இச்சம்பவம் ஒரு அனர்த்தம் அல்ல படுகொலையே என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் முறைப்பாடு செய்திருக்கிறார். இச்சம்பவம் பற்றி அவர் வழங்கிய நேர்காணல்,
இந்த சம்பவம் இலங்கையை மட்டுமல்ல முழு உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது ஆனாலும் இப்படி ஒரு சம்பவம் இடம்பெறப்போகின்றது என்பது எமது தலைவர்களுக்குத்தெரியும். 2006 ஆம் ஆண்டு இவ்விடத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதா என ஆராய ஒரு குழு வருகை தந்திருந்தது. இப்பிரதேச மண்ணை ஆய்வுக்குட்படுத்தியதன் பின்னர் இவ்விடம் மக்கள் வசிப்பதற்கு உகந்தது அல்ல என ஒரு அறிக்கையை அரசாங்கத்திற்கு வழங்கியது.
இங்கு வசிப்பவர்களுக்கு வேறு இடம் வழங்கும்படியும் இங்குள்ள குடியிருப்புக்களை அகற்றும் படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அப்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமானிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் பிரகாரம் தோட்ட நிர்வாகத்துடன் பேசக்கூடிய அதிகாரம் கொண்ட அமைச்சு அவரிடம் இருந்ததால் அது குறித்து பேசி இங்கு வசித்து வரும் 64 குடும்பங்களை வேறு இடத்திற்கு குடியமர்த்த ஆவண செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
அதன் படி இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில் தோட்ட நிர்வாகமானது குடியிருப்புக்களை அமைக்க புதிய இடத்தை ஒதுக்கித்தந்தது.இருப்பினும் 2014 ஆம் ஆண்டு வரை அவ்விடத்தில் 17 வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டன. அதிலும் அந்த 17 வீடுகளும் குறித்த தொழிலாளர்களின் ஊதியத்தில் ஒரு தொகை பிடிக்கப்பட்டே கட்டப்பட்டு வந்தது.
அவர்களின் சொந்தப்பணமே அதற்கு செலவளிக்கப்பட்டது. இதை உறுதியாக நான் எப்படி கூறுகிறேன் என்றால் அந்த வீடுகளை கட்டுவதற்கு மணல், கற்களை எனது லொறியில் தான் அவர்கள் கொண்டு வந்தனர். சிலர் தமது மனைவிமாரின் தாலியை விற்றுக்கூட பொருட்களை வாங்கினர் காரணம் அவ்விடத்திலிருந்து தமது குடும்பத்தின் பிள்ளைகளின் உயிரை காப்பாற்றிக்கொண்டு விரைவாக சென்றுவிட வேண்டும் என்ற பயம் தான்.
இந்த 17 பேரும் அங்கிருந்து ஒருவாறு சென்று விட்டனர் ஆனால் மிகுதியானவர்களுக்கு அவ்வாறு செல்ல முடியவில்லை.காரணம் அமைச்சின் மூலம் அவர்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கவில்லை. சரியான நேரத்தில் அந்த 64 குடும்பங்களுக்கும் குடியிருப்புக்களை அமைத்து கொடுத்து அபாயகரமான பிரதேசத்திலிருந்த குடியிருப்புக்களை அழித்திருந்தால் அங்கு யாரும் சென்று குடியிருந்திருக்கமாட்டார்கள்.
எனது மனைவி ஒரு குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர். 1999 ஆம் ஆண்டு இந்த தோட்டத்தில் அவர் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் வைத்தியசாலை குவார்ட்டஸில் எனது பிள்ளைகளோடு இருக்க நான் அச்சமயத்தில் வெளிநாட்டில் இருந்தேன். 1997 ஆம் ஆண்டு எனது மூத்த மகனுக்கு மூளையில் ஒரு கட்டி உருவானது அதற்கான மருத்துவ செலவுகள் சுமார் 6 இலட்சத்தை தாண்டியது எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் இறந்து விட்டார். வாழ்வாதாரம் மிகவும் மோசமானது ஒரு புறம் மகன் இறந்த சோகம் மறுபுறம் பொருளாதார நெருக்கடி காரணமாக பஸ் சாரதியாக இருந்த நான் வெளிநாடு செல்ல தீர்மானித்தேன்.
ஆகவே எனது மனைவி இந்த தோட்டத்திற்கு வரும் போது நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். மண் சரிவு அபாயம் பற்றி எனது மனைவி அறிந்து வைத்திருந்தார். அது தொடர்பில் தனது குடும்பத்திற்கு வேறு இடத்தில் காணியோ அல்லது வீடோ அமைத்துத்தரும்படி தோட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியும் பலனில்லை.
அந்தத்தோட்டத்திற்கே எனது மனைவி சேவையாற்றினார் ஆனால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவரது சேவைக்காலத்தில் ஒரு சிசுமரணமோ அல்லது தாய்மார் இறப்போ ஏற்படவில்லை அவர் அர்ப்பணிப்போடு கடமையாற்றினார். அதிலும் எனது மனைவி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு மாதாந்தம் சந்தா செலுத்தும் ஒருவர் .
இந்த சம்பவம் இடம்பெற்ற மாதம் வரை அவர் இறுதியாக செலுத்திய சந்தா ரசீது என்னிடம் உள்ளது. இவ்வளவு நடந்த பிறகும் கூட இந்த கட்சியைச்சேர்ந்த தலைமைகள் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை மௌனம் சாதித்துக்கொண்டு தொடர்ச்சியாக இந்த மக்களை ஏமாற்றியே வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கவில்லை தற்காலிக குடியிருப்பு வசதியில்லை என்று தான் இவர்கள் பேசி வருகிறார்களே ஒழிய இந்த மக்களும் தமக்கு என்ன தேவை என்பதை தலைவர்மாரிடம் கேட்பது இல்லை.
இவ்வளவு நடந்தும் இவர்கள் நாங்கள் தான் உங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பின்னே சிலர் அணி திரண்டு கொண்டும் வருகிறார்கள். ஆனால் அணி திரள்பவர்கள் விரைவாக அனுபவிப்பார்கள். ஏனென்றால் மீரியபெத்த மட்டுமல்ல மலையகம் முழுக்க இந்த ஆபத்து இருக்கின்றது இங்கு உயிரிழந்த 37 பேரோடு முடியப்போவதில்லை இந்த அனர்த்தம். ஊவாவின் பல இடங்களில் இந்த ஆபத்து இருக்கின்றது ஆனால் நான் எவ்வளவு கத்தினாலும் எவரும் இதை காதில் போட்டுக்கொள்ளவதில்லை.
இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமாக இருந்த ஆறுமுகன் தொண்டமானும் செந்தில் தொண்டமானும் நாங்கள் தான் உங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் எங்களை அணைத்து ஆள்பவர்கள் தான் தேவையே ஒழிய அடித்து ஆள்பவர்கள் இல்லை.அடித்து ஆளும் நிலை இங்கு சரிவராது அது இந்தியாவில் தான் சரிவரும்.
வழக்கு தொடர்ந்துள்ளேன் எனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து நான் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டு வழக்கு தொடர தீர்மானித்துள்ளேன் அதாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மீது தான் வழக்கு, ஏனென்றால் எனது மனைவி இறுதி வரை அந்த தொழிற்சங்கத்திற்கு சந்தா செலுத்தினார். ஏனையவர்களுக்கு நான் எடுத்துக்கூறியும் அவர்கள் அதை கவனத்திற்கு எடுக்கவில்லை ஏதோ எல்லோரும் செத்து விட்டார்கள் என மௌனமாகி விட்டனர்.
ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது தனிமை என்னை கொல்கிறது.நான் தங்கியிருக்கும் வீட்டின் சுவரில் மாட்டியிருக்கும் எனது மனைவி குழந்தைகளின் படங்களைப்பார்க்கும் போது இப்படி ஒரு சம்பவம் எமக்கு நடந்ததே நீங்கள் என்ன செய்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்புவது போல் உள்ளது. 2006 இல் இங்கு இனங்காணப்பட்ட ஆபத்தை இவர்கள் அக்கறையோடு உணர்ந்திருந்தால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்காது ஆகவே இவர்கள் கொலை செய்தவர்கள் இந்த மரணங்களுக்கு காரணமாக இருந்துவிட்டு மீண்டும் மீண்டும் நம்மிடம் வந்து நாம் தான் உங்கள் பிரதிநிதிகள் என்றால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது.
பிரதமர் வழங்கிய காணி உறுதிபத்திரத்தை பொய் என்கிறார்கள் தலவாக்கலையில் மீறியபெத்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கப்பட்டது. அதில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்த திகாம்பரம் அவர்களூடாக பிரதமர் ரணில் அவர்கள் எனக்கும் காணி உறுதி பத்திரத்தை வழங்கினார். ஆனால் அது பொய் என இ.தொ.கா கதைகளை அவிழ்த்து விட்டது.
ஒரு நாட்டின் பிரதமர் வழங்கிய காணி உறுதி பத்திரம் பொய்யாக இருக்குமானால் இவர்கள் அதை நீதிமன்றத்திற்கு சென்று நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து தாமாகவே கற்பனை கலந்த கதைகளை சொல்லக்கூடாது. தாம் 75 வருடங்களாக மலையக மக்களுக்காக குரல் கொடுத்தோம் என்கிறார்கள் இத்தனை வருடத்தில் ஒரு அங்குலம் நிலத்திற்கு இவர்களால் காணி உறுதி வாங்க முடிந்ததா? ஆனால் இன்று 7 பேர்ச்சஸுக்கு காணி உறுதி வழங்கப்பட்டு வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. நானும் அந்த வீடமைப்பு திட்டம் நடக்கும் இடத்திற்கு தினமும் போய் வருகிறேன்.
பிள்ளைகளிடம் ஒரு வார்த்தை கேளுங்கள்
இப்போதுள்ள அரசியல்வாதிகள் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் கேளுங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என அவர்களிடம் ஒருவார்த்தை கேளுங்கள். ஏனென்றால் பேஸ் புக்,இண்டர்நெட் என அவர்கள் தான் உலகத்தைப்பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவர்களுக்குத்தெரியும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என.
இனியும் ஐயாவுக்கா அம்மாவுக்காக என்பதை விட்டு விடுங்கள் நீங்கள் உங்களுக்காக வாழப்பழகுங்கள். இப்போது நான் எனக்காக மட்டுமே கத்திக்கொண்டிருக்கிறேன், எனக்கு யாரும் இல்லை எனக்கு ஒன்றுமே இல்லை.. நான் பேரப்பிள்ளையும் எடுத்து அவர்கள் எல்லோரையும் தொலைத்து விட்டு இருக்கிறேன். எனது குரலுக்கு சற்று மதிப்பு கொடுங்கள் என்பதே எனது கோரிக்கை. உங்களின் வருங்காலம் உங்கள் பிள்ளைகள் கைகளில் தான்.
என்னை முதலாளியாக்க சொல்லுங்கள்
அனைத்து தொழிலாளர்களும் எமது பக்கம் தான் இருக்கின்றனர் என இ.தொ.கா தலைவர்கள் சொல்கிறார்கள் அப்படியானால் இத்தனை காலமும் அவர்கள் கொடுத்த சந்தா பணத்தில் மாதத்திற்கு மூன்று வீடுகளை கட்டியிருக்கலாம். அது மட்டுமா எனது பின்னே அணி திரளுங்கள் தொழிலாளிகளை முதலாளிகளாக்குகிறேன் என ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார் இதோ அத்தனைப்பேரையும் இழந்து இன்று மீரியபெத்தையில் சுற்றிக்கொண்டிருக்கிறேனே முதலில் என்னை முதலாளியாக்கிகா ட்டுங்களேன் ? ஏனென்றால் நான் ஒ ருதோட்டத்தொழிலாளியி்ன் பிள்ளை எனது மனைவி உங்கள் சங்கத்திற்கு சந்தா கொடுத்து வந்தவர், இறுதியில் உயிரையே கொடுத்தவர் .
எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விடுவதில் அர்த்தமில்லை களத்தில் இறங்க வேண்டும். ஆனால் எமது தொழிலாளர்களுக்கு அந்த தெளிவு வேண்டும். அவர்கள் சரியான முறையில் சொன்னால் கேட்பார்கள் முதலில் இவர்களை அரசியலில் இருந்து நாம் ஒதுக்க வேண்டும் இவ்வாறானவர்கள் எமக்குத்தேவையில்லை அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் ஆரம்பித்த தொழிற்சங்கம் இருக்கட்டும் அதன் மூலம் நன்றாக சம்பாதித்தவர்கள் இப்போது தேவையில்லை.
எனக்கு எனது மனைவி கொடுத்த சந்தாவிற்கு பதில் கூற வேண்டும் நான் இது குறித்து சகல ஊடகங்களுக்கும் தெரியப்படுத்திக்கொண்டே இருப்பேன். அவர்களுக்கும் நமது நாட்டு அரசியலுக்கும் சரிபட்டு வராது. ஏனென்றால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை அரசாங்கமே கேட்கவில்லையே? ஆகையால் அவர்களுக்கு இந்தியாவில் கட்டப்பஞ்சாயத்து அரசியல் தான் சரிவரும். இவர்கள் தேர்தல்களில் சாராயம் வாங்கிக்கொடுத்து வாக்குகள் கேட்பது இங்கு எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்தைவைத்தே அந்த சமூகத்தை எப்படி அழிப்பது என்பதும் தெரியும்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் தோட்டங்கள் மூடப்படவில்லை.இப்போது 75 வருட தொழிற்சங்கம் என்கிறார்கள் நாங்கள் அமரர் தொண்டமான் அவர்களின் காலத்தைப்பார்ப்போம். அவரது காலகட்டத்தில் எந்த தொழிற்சாலையாவது மூடப்பட்டிருக்கின்றதா? இல்லை தோட்டங்களும் மூடப்படவில்லை. ஜெயவர்தன ,பிரேமதாச ஆகியோரிடம் போராடி எமது மக்களுக்கு சில உரிமைகளை வாங்கிக்கொடுத்து விட்டு அவர் இறந்து விட்டார்.
ஏதோ நவீன அரசியல் செய்கிறோம் எனக்கூறிக்கொண்டு இவர்கள் களமிறங்கினார்கள். இன்று ஆசிரியர் , உதவி ஆசிரியர் என்ற அரசாங்க உத்தியோகத்தைத்தவிர வேறு என்ன தொழிலை இவர்கள் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்து விட்டனர்? அதுவும் அரசாங்கம் கொடுப்பதை வாங்கி இவர்கள் தாம் வாங்கிக்கொடுத்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.
இவர்களால் உருவாக்கப்பட்ட கல்விமான்கள் புத்திஜீகள் யாரையாவது இவர்கள் பட்டியல் படுத்த முடியுமா? இன்று தோட்டப்பகுதிகளில் இருக்க வேண்டிய முகாமையாளர்கள்,உதவி முகாமையாளர்கள் அனைவரும் எமது பிள்ளைகளாக இருக்க வேண்டும் அப்படி எதுவும் நடந்ததா? அவர்கள் உண்ணும் உணவிலிருந்து ஏனையவற்றுக்கு செலவளிக்கும் அனைத்தும் அவர்களது பணம் அல்ல அது தொழிலாளர்களின் வியர்வை,அவர்களின் உழைப்பு எமது அம்மா ,அப்பா,சகோதரிகளின் பணம் அது. சந்தா பணத்திற்கு வாயில் கணக்கு சொல்லி சரி வராது இந்த பணத்திற்கு இது தான் செலவு என அவர்களால் பத்திரிகை ஒன்றில் விபரம் வௌியிட முடியுமா?
ஆறுமுகன் வந்தார் பார்த்தார் சென்றார்
மீறியபெத்த சம்பவம் இடம்பெற்று முடிந்த பிறகு அந்த இடத்திற்கு நாட்டின் முக்கியமான தலைவர்கள் வந்து அனைவருக்கும் ஆறுதல் சொல்லி விட்டு சென்றனர். ஊவா மாகாண முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் ரணில் ,மாகாண எதிர்கட்சி தலைவர் பலரும் வந்து குறிப்பாக எனக்கு மிகவும் ஆறுதலான சொற்களை கூறினர். எம்மால் உயிரைத்தவிர மற்ற அனைத்தையும் உங்களுக்குத்தந்து உதவுகிறோம் இப்படியான சம்பவம் நடந்திருக்கக்கூடாது என அவர்களும் கண்கலங்கினர்.
ஆனால் சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப்பிறகே இந்த மக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஆறுமுகன் வந்தார். கறுப்புக்கண்ணாடி அணிந்து பரிவாரங்களுடன் வந்த அவரிடம் சென்று எனது நிலைமையை கூறலாம் என அருகே சென்ற போது அவரி்ன் பாதுகாவலர்கள் என்னை பிடித்து தள்ளி விட்டதில் நான் கீழே விழுந்து விட்டேன் நான் அவரிடம் உதவி கேட்கப்போகவில்லை.
உங்கள் தொழிற்சங்கத்திற்கு சந்தா செலுத்திய எனது மனைவிக்கு ஏற்பட்ட கதியை கூறத்தான் போனேன் ஆனால் அவரை நெருங்க விடவில்லை . அதற்கடுத்த நாள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் கணேஷா வித்தியாலயத்திற்கு பலரும் வந்து உலர் உணவுப்பொருட்கள் வழங்கிச்சென்றனர். இதை கேள்விப்பட்ட செந்தில் தொண்டமான் அங்கு வந்து அரசியல் பேசினார். " ஒங்களுக்கு தங்கவே வீடு இல்ல கொடுக்கிற சாமான்கள எங்க வச்சிக்கப்போறிங்க " என கேள்வி எழுப்பி விட்டு அவர் போய் விட்டார். மறுநாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வந்தார். தலைவர் ஒரு மனிதர் என்ற ரீதியில் அவர் பேசினார்.
உங்கள் பிள்ளைகளை எங்களிடம் தாருங்கள் நாங்கள் கல்வி கொடுத்து பராமரிக்கின்றோம் என்றார். அப்போது ஒரு ஊடகவியலாளர் இந்த மக்களுக்கு என்ன உதவிகள் செய்யப்போகின்றீர்கள் என கேட்ட போது ஏன் அவர்களுக்கு இங்கு இருக்க கடினம் என்றால் அவர்கள் சம்மதித்தால் அவர்களையும் நாம் பொறுப்பேற்கிறோம் என்றார். இது தான் ஒரு தலைவருக்கு அழகு. ஆனால் பாருங்கள் அடுத்த நாள் இவர்கள் பத்திரிகையில் அறிக்கை விடுகின்றனர் வடக்கு கிழக்கை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் எங்கள் மக்களை நாம் பார்த்துக்கொள்கிறோம் .... இவர்கள் மக்களைப்பார்த்த இலட்சணத்தை தான் இப்போது உலகமே பார்க்கிறதே? நீங்கள் சரியாக பார்த்திருந்தால் இவ்வளவு பேரும் இங்கு பலியாகியிருக்க மாட்டார்களே ? அவர்கள் செய்வது அரசியலா இவர்கள் செய்வது அரசியலா?
மகிந்தவிடம் பேசுவதாக மக்களை ஏமாற்றினார்
மக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்த ஆறுமுகன் தொண்டமான் அனைவரையும் ஏமாற்றும் ஒரு வேலையைச்செய்தார். அவர் வந்தவுடன் எல்லோரும் அவரி்ன் பின்னாள் ஓடினார்கள். தனது கையடக்கத்தொலைபேசியை எடுத்து சிங்களத்தில் நீங்கள் நாட்டில் இருக்கின்றீர்களோ வௌிநாட்டில் இருக்கின்றீர்களோ எனது மக்களுக்கு 200 வீடுகளை உடனடியாக கட்டித்தர வேண்டும் என கதை்தார் ஆனால் தொபை பேசி அழைப்பு ஏற்படுத்தப்படவே இல்லை என எனக்குப்புரிந்தது இருந்தாலும் பாருங்கள் அதற்கும் அவரை சூழவுள்ள மக்கள் கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர். இப்படி இந்த மக்களை ஏமாற்றுவது என்பது கொலை செய்வதை விட கொடியது.
சுடுகாட்டில் அடிக்கல் நாட்டினர்
நமக்கு ஏதாவது செய்வார்களா ஆறுதல் கிடைக்குமா என பாதிக்கப்பட்ட மக்கள் ஏங்கியிருக்கும் போது அப்படி ஒரு ஏமாற்று நாடகம். 200 வீடுகள் என்றவர் இது வரை 2 வீடுகள் கூட கட்டித்தரவில்லை. வீடுகள் அமைத்துத்தருகிறோம் என சுடுகாட்டில் போய் அடிக்கல் நாட்டினார்கள் அந்த இடத்திற்கு நான் போகவில்லை ஏனென்றால் அது மக்கள் வாழ உகந்த இடம் இல்லை என்பது எனக்குத்தெரியும். அங்கு மண்சரிவு அபாயம் இல்லை ஆனால் அப்பிரதேசத்தில் வீசும் காற்றில் குடியிருப்பின் கூரைகள் பறந்து விடும். எமது மக்கள் தமது குழந்தைகளை கூரையில் கயிறு கட்டி தான் தொட்டிலில் போடுவார்கள் அப்படி தொட்டிலில் போட்டு விட்டு சமையலறையி்ல் இருக்கும் போது கடுங்காற்று வீசினால் பிள்ளையோடு கூரையும் சேர்ந்து போய்விடும். ஆனால் புதிய அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்ட இடம் அப்படியில்லை .அங்கு பணிகள் இப்போது முடியும் தறுவாயில் இருக்கின்றன.
தலவாக்கலை நிகழ்வை குழப்ப ஆட்கள் அனுப்பினார்கள்
தலவாக்கலையில் காணி உறுதி வழங்கும் நிகழ்வை குழப்ப ஒரு கோஷ்டியினர் முன்வரிசையில் இருந்தனர் அனைவரும் குடிபோதையில் வந்திருந்தனர். சத்தமிட்டு நிகழ்வை குழப்பிக்கொண்டிருந்தனர். நான் அவர்களில் ஒருவரிடம் சென்று தம்பி நீங்க எல்லாம் யாருப்பா இங்க என்ன நடக்குது ? மீறியபெத்தையில பாதிக்கப்பட யோகராஜ் வந்திருக்கேன் அஞ்சு உயிர்கள பறிகொடுத்துட்டு வந்துருக்கேன் ஏன் இப்படி சத்தம் போடுறிங்கன்னு கேட்டேன் அதற்கு அவர் உங்களுக்கு கட்டாயம் வீடு கெடைக்கும் அண்ணே ஒன்னும் பிரச்சினையில்ல இந்த கூட்டத்தத கொழப்பு எங்கள அனுப்புனாங்க அது தான் உண்மைன்னு சொன்னார். அப்போது நான் தெரிந்து கொண்டேன் என்ன இருந்தாலும் நம்ம ஆளு நம்ம ஆளு தான் அவன் எங்கள ஏமாத்த மாட்டான் ஆனா அவங்க?
அனைத்தையும் மாற்றும் சக்தி எங்கள் பிள்ளைகளிடம் உள்ளது
ஜனாதிபதி தேர்தலில் நடந்தது என்ன என்பதை நாடே அறியும் குறிப்பாக மலையகம் அறியும். கொழும்பிலிருந்து பஸ் பஸ்ஸாக மலையகத்துக்கு வந்து வாக்கு போட்டவர்கள் அனைவரும் எமது பிள்ளைகள் தான். மாற்றம் வேண்டும் என அவர்கள் அங்கிருந்து வந்தார்கள். அதைத்தான் நானும் மறுபடி வலியுறுத்துகிறேன். இப்போது சொன்னதை செய்யும் தலைவர்கள் வந்திருக்கின்றார்கள், அவர்களும் செய்யாவிட்டால் அவர்களையும் மாற்ற வேண்டும்.அதை எமது பிள்ளைகளிடம் விட்டு விடுங்கள். எனது குடும்பம் புதைந்து விட்டது நான் அவர்களின் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருப்பேன். என்னால் முடிந்த நல்லதை மற்றவர்களுக்கு செய்வேன்.
எனக்கு ஆறுமுகன் தொண்டமானிடமோ ,செந்தில் தொண்டமானிடமோ அல்லது முத்து சிவலிங்கத்திடமோ தனிப்பட்ட கோபங்கள் எதுவும் இல்லை ஆனால் அவர்கள் இந்த மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். ஒரு சமூகத்தின் அழிவுக்கு அதே சமூகத்தை சேர்ந்தவர்களை உருவாக்குகிறார்கள்.ஆகவே இந்தவிடயத்தில் நான் ஓயவே மாட்டேன். நான் இந்த சம்பவத்தில் பலியான அனைவர் சார்பாகவும் தான் போராடுகிறேன் மட்டுமல்லாது இவ்வாறான அனர்த்தத்தில் சாக இருப்பவர்களுக்காகவும் தான் பேசுகிறேன்.எனக்கு தான் தெரியும் அந்த கடினம். மண்ணுள் புதைந்து போன 37 பேரையும் எனக்குத்தெரியும் அவர்களுக்காகவும் எனது குடும்பத்தினருக்காகவும் நான் தினமும் மூன்று நான்கு தடவை கதறி அழுகிறேன். இனி இந்த துயரம் வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது.