Thursday, October 29, 2015

மூக்கு இல்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணுடன் காணப்படுகின்றது.

எகிப்து நாட்டின் எல்சென்பெல்லா வெய்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூக்கு இல்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணுடன் காணப்படுகின்றது.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது, கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் பாதிப்பால், கருவில் இருக்கும் இழந்தைக்கு இத்தகைய குறைபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த குழந்தை இன்னும் ஒரு சில நாட்களே உயிர்வாழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அந்த குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6df121d9-2bb7-422e-88bc-89e032ef61b5_ORIGINAL

No comments:

Post a Comment