Friday, November 20, 2015

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு! மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு! மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு (முழு விபரம்)
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015, 08:43.37 AM GMT ]
2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து நிதியமைச்சர் தற்போது உரையாற்றுகிறார்.
இதன்போது நாடு பாரிய சிக்கல் நிலையில் இருந்த போதே அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடிகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் நிறைந்து காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதோடு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது.
பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவுதல் என்பவற்றின் ஊடாக நல்லாட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு பயன்களை அனுபவிக்கும் வகையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதே இந்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
500 மில்லியனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை முன்வைக்காது பல மில்லியன் திட்டங்களை முன்வைப்பதே சிறந்த திட்டம்.
நீண்ட கால பிரதிலாபம் பெறும் வகையில் விசேட பொருளாதார அடித்தளம், கொண்ட கொள்கை சார்ந்த வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்வாழ்வை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்கால தலைமுறையினருக்கு நன்மைகளை அனுமதிக்கக் கூடிய வகையில் பொருளாதாரத்தை உருவாக்குதல் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கடந்த 10 மாதங்களில் சமூக அரசியல் மற்றும் பொருளாதாரம் பாரிய அளவில் மாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியதோடு, பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணமுடியாத நிலை காணப்படுகிறது.
தெற்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் கொலைகளினால் பல்வேறு ரீதியில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிர்வரும் காலங்களில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வருவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள், விமான நிலையங்களை அமைத்தல் மற்றும் துறைமுகங்களை நிர்மாணித்தல் போன்ற திட்டங்களுக்கு பாரியளவிலான வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டமையானது, பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையை மீள செலுத்த தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்
விமானங்கள் வராத வகையிலான விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டமை மற்றும் கப்பல் வராத துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டமை நாட்டை பொருளாதார ரீதியில் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்து முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், 2014ஆம் ஆண்டு தேசிய உற்பத்தியானது 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் வருமானம், கடனை செலுத்தவே போதுமானதாக அமையாது. இதனூடாக நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற முடியாது.
சேமிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. நாட்டின் நிதி கட்டமைப்பில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டுள்ளமையை நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காணி, வீடு மற்றும் சுகாதார துறைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்.
சர்வதேச சந்தை ஊக்குவிப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சீர்திருத்தப்பட்ட பொருளாதார கொள்கைகளின் படி இலங்கை புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கம் குறைபாடுடைய பொருளாதார திட்டத்தையே பின்பற்றியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் சுதந்திரமான சந்தை செயற்பாடுகளை செயற்படுத்த தேவையான சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடியும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
 2016ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நிறுவனங்களிலுமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் பிரகாரம் இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க கூறினார்.
அதன்பிரகாரம், அத்தியாவசியமற்ற செலவீனங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வரி செலுத்துவோருக்கு பயன் கிடைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய நன்மைகள் குறித்தும் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஒய்வூதியம் பெறுவோர் தற்போது பெற்றுக் கொள்ளும் எந்தவொரு சலுகைகளிலும் குறைவு ஏற்படாது என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகளவிலான சலுகைகளை அனைத்து தரப்பினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் அபிவிருத்திக்கு தனியார் துறையின்  முதலீடுகள் அவசியம் என குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் முதலீடுகள் மிகவும் அதிகளவில் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர், அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க  வேண்டிய நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதிகளவிலான வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொண்டுள்ளமையினால் கடன் சுமை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவத்தை சரி செய்து, அதனூடாக கடன் சுமையை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி தொடர்பில் அதிகளவிலான கொள்கைகள் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எனினும், இலங்கையில் கல்வித்துறை புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
குறைந்த வளங்களை கொண்ட பாடசாலைகளுக்கு, அதிகளவிலான வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மிக வேகமாக பரவிவரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தமது அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சேமிப்பு மற்றும் ஓய்வூதிய திட்டம் தொடர்பில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய வருமானத்தை பெறுவோருக்கு வீடமைப்பு திட்டத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண அபிவிருத்தி திட்டமொன்றையும் ஏற்படுத்த தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் வாகன நெரிசலை குறைக்கவும், நகர பகுதிகளிலுள்ள ரயில் சேவைகளை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
காலத்தின் தேவைக்கேற்ற வகையிலான முதலீடுகளை மேற்கொள்ளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நிரந்தர அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக சூரிய மின் சக்தியை பயன்படுத்துவது அவசியம் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தனியார் துறையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து இலங்கையர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு நிதியங்களை கொண்டு ஒரு நிதியமொன்றை ஏற்படுத்தி அதனூடாக நடுத்தர பிரிவினருக்கு உதவிகளை வழங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய தர நிறுவனங்களுக்கு 50 வீத வரி விலக்கை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர பிரிவினர் தமது உற்பத்திகளை விநியோகிப்பதற்காக வர்த்தக நிலையங்களில் புதிய இடமொன்றை ஏற்படுத்திக் கொடுக்கவும் தீர்மானிக்க்பபட்டுள்ளதாக ரவி கருணாநாய்கக குறிப்பிட்டார்.
புதிய விவசாய கொள்கையொன்றை ஏற்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டாக்கும் போது சோளம், சோயா, போஞ்சி, கிழங்கு ஆகியவற்றின் ஊடாக நாட்டின் போஷனை தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
விதை மற்றும் மரம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விளைச்சல்களை களஞ்சியப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தினுடனான களஞ்சியசாலைகளை ஏற்படுத்தவும் வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு வணிக வங்கிகளின் ஊடாக 50 வீத கடனை பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறான களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தினால் பல தேவைகள் விவசாயிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும், விவசாய துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
இதனூடாக சர்வதேச நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் உரத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் இன்றும் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.
விவசாயிகளுக்கு நிவாரண உதவியாக ஒரு ஹெக்டெயருக்கு 25,000 ரூபாவை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழ விவசாயம் நாட்டில் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
இந்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ளோர் வங்கிகளில் பெற்றுக் கொள்ளும் கடனுக்காக வட்டி வீதத்தில்  50 வீத குறைப்பை முன்மொழியப்பட்டுள்ளது
400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றுக்கு 295 நிர்ணய விலை வரவு-செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு ஏற்படுகின்ற நட்டத்திற்காக அரசாங்கத்தினால் பக்கட் ஒன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுவதுடன், அதற்காக அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மரக்கறி, பழங்கள் ஆகியவற்றை களஞ்சியப்படுத்துவதற்காக 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு ஒரு மில்லியன் காப்புறுதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரின் மீன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தின் உடனான குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகளை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்பிரகாரம், சிலாபம், வல்வெட்டித்துறை, காரைநகர், மீரிய, கல்முனை ஆகிய பகுதிகளில் இந்த களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
கீரி சம்பா 50 ரூபாவாகவும், சம்பா 41 ரூபாவாகவும், நாடு 38 ரூபாவாகவும்,  நிர்ணய விலை அடிப்படையில் அரிசி அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
ஒரு கிராம சேவகர் பிரிவிற்காக 1500 மில்லியனை வழங்கி அந்த கிராம சேவகர் பிரிவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்தார்.
கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்வதற்காக 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு  செய்ய வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழியப்பட்டுள்ளது.
தென்னை உற்பத்தி அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், தேயிலை உற்பத்தித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய விசேட குழுவொன்றை அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
வவுனியாவில் பொருளாதார வலயமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
தேயிலை ஏற்றமதியின்போது Ceylon tea  என பெயரிடப்படுவது கட்டாயமாகும். 
எல்லா பிரதேசங்களிலும் விவசாய நிறுவனங்கள் நிரறுவப்படும்.
தங்க இறக்குமதிக்கு மத்திய வங்கியின் ஊடாக 50 அனுமதிப் பத்திரங்களில் விநியோகிக்கப்படுவதுடன், அதனை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு தங்கத்தை இறக்குமதி செய்ய முடியாது என நிதி அமைச்சர் அறிவித்தார்.
தங்க இறக்குமதிக்காக 25 வீத வரிச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தீர்மானி்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
“பொக்குரு கம்மான” திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு
அரச நிறுவனங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றது.
பொலிஸ் மற்றும் தபால் திணைக்களங்களும் முழுமையான முறையில் டிஜிட்டல் முறையில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தவருடம் முதல் ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் வருடாந்த இரத்தினக்கல் ஏலம்.
அனைத்து அரச கட்டிடங்களுக்கும் புதிய தொழிநுட்பத்தை உட்செலுத்த வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கிடு.
ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தையும் 2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
வெளிநாட்டு பிரஜைகளின் முதலீட்டுக் கோரிக்கை 15 நாட்களில் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் கப்பல்களை நிர்மாணிக்கும் இடங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார்.
இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும். வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது 10 மில்லியன் ரூபா முதலீடு அல்லது 500 புதிய தொழில்வாய்ப்பு
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 50 வீதம் வரிச்சலுகை. புதிய முதலீட்டு திட்டம் அமுல்.
வீடுகளுக்கு சூரிய மின்சக்திக்காக வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிர்மாணத்துறை சார்ந்த விடயங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன், அவர்கள் இலங்கையிலுள்ள நிர்மாண நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டியது அத்தியாவசியமாக காணப்படுகின்றது. அத்துடன், மத்திய தர நிர்மாணத்துறை நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்காக அரசாங்கத்தின் காணிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்குள் ஒரு லட்சம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்காக அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், அநுராதபுரம், மாத்தறை, புத்தளம் ஆகிய பகுதிகளில் இந்த வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு தேர்தல் தொகுதிக்கு ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க  திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டவுள்ளது.
ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு 100க்கு 40 வீதம் கடன் உதவி.
BMICHயைப் போல NEW TOWN HAll ஆகியவற்றையும்  மாநாட்டு மண்டபமாக மாற்ற திட்டம்.
மலையகம் மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் சுற்றலாத்துறையை மேம்படுத்த திட்டம்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச வங்கிகளுக்கு அழைப்பு
சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்
கட்டத் துறையில் பயிற்சி பெறும் ஊழியர்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா கொடுப்பனவு சொகுசு வரி மற்றாக நீக்கப்படும்.
சார்க் நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.
திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்.
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதுடன், அதற்கான விளம்பரங்கள் செய்யப்படும்.
உள்நாட்டு வங்கி கிளைகள் வெளிநாட்டில் திறக்கும் போது வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள வங்கிக் கணக்கு தொழில் வழங்குனர்களால் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா வழங்கப்படுவதுடன், அவர்களுக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்காக இளைஞர் யுவதிகளுக்கு 3 மாத பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
அதற்காக 15 ஆயிரம் ரூபா அறவிடப்படவுள்ளதுடன், அதற்காக அரசாங்கம் 50 வீத செலவீனத்தை ஏற்றுக் கொள்ளவுள்ளதாக ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
45 லட்சம் சிறுவர்களுக்காக சேமிப்பு திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் போது பெருந்தொகை பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பங்கு பரிவர்தனை நிலையம் இலாபத்தை ஈட்டும் நிறுவனமாக ஏற்படுத்தவுள்ளதுடன், அதனை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் பங்குகளை விற்பனை செய்யும் வகையிலான நிறுவனங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரவி கருணாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
புதிய வாகன பெறுமதி மதிப்பீட்டுக்கட்டணம் : முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் – 1500 ரூபா, ஏனைய வாகனங்களுக்கு 15000.
கேஸ் 150 ரூபாவினாலும் மண்ணெண்னையின் விலை 10 ரூபாவினாலும் குறைப்பு
கடன் அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யயும் போது அறவிடப்படும் 1.5 வீதமாக முத்திரை வரி குறைக்கப்படும். வெளிநாட்டு பொருட்களை கொள்வனவு செய்யும் போது 2.5 வீத முத்திரை வரி அறவிடப்படும்.
கல்வி வளர்ச்சிக்காக 90 ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு. இதன்படி, பாடசாலை அபிவிருத்திக்காக 10000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் முதல் ஐந்து வருடங்களில் கட்டாயமாக இரண்டு வருடங்கள் ஆசிரியர் பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்றமை அத்தியாவசியமாகின்றது.
புதிய ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக 1000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளின் சுகாதாரம் மற்றும் குடிநீருக்காக 4000 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சார வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 15000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பாடசாலைகளை மீளக்கட்டியெழுப்புவற்காக 30000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டப்புற பாடசாலைகளின் வளர்ச்சிக்காக 250 மில்லியன் வழங்கப்படவுள்ளது.
தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு
சுயாதீன பணிப்பாளர் சபையின் கீழ் முறிகள் தொடர்பான நிறுவனம் ஆரம்பிக்கப்படும்
அச்சிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளுக்கு வரிச்சலுகை 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்ழுவுக்கான முதலீடு 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும்.
சகல பல்கலைகழக மாணவர்களுக்கும் 2018ஆம் ஆண்டளவில் தங்களுடைய முழுக் கல்வி காலத்தையும் விடுதி வசதிகளுடன் கழிப்பதற்கு நடவழக்கை எடுக்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடி கணனிகளை பெற்றக்கொள்ள 30.000 ரூபா வழங்க திட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பீடமும் வவுனியா மாவட்டத்தில் விவசாயப் பீடமும் அமைக்கப்படுவதுடன் மகாபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படும்.

2018 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதி அமைத்து கொடுக்கப்படும்.

இதற்கமைய கல்வித்துறைக்கு மொத்தமாக 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இது மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் 5.41 வீதம் எனவும் குறிப்பிட்டார்
வை-பை வலயங்களை ஏற்படுத்துவதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோய் வைத்தியசாலைகளை ஸ்தாபிக்கப்பதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நல்லூரியிலும் புற்று நோய் வைத்தியசாலை ஸ்தாபிக்க திட்டம்.
சிறுநீரக நோய் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸ் நிலையங்களில் எண்ணிக்கை 428இல் இருந்து 600 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் பயிற்சி நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைகழக மாணவர்களுக்கு பட்டப்படிப்பின் கட்டாய தொழிற்பயிற்சி வழங்க திட்டம்
உயர்தரம் மாணவர்களுக்கு பரீட்சையின் பின் கட்டாய தொழி்ற்பயிற்சி
மஹாபொல பல்கலைக்ழகம் என்ற பெயரில் மாலபேயில் புதிய பல்கலைக்கழகம்
ஆசிரியர்களுக்கு விடுதி வசதிக்காக 2000 ரூபா உறுதியளிக்கின்றது.
கல்வித்துறைக்ககு மொத்தமாக 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடு இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விதத்தில் 5.54 வீதமாகும். 
பாடசாலை மாணவர்களின் சிருடைக்கு வர்த்தக பெறுமதியூடன் நிதிச்சிட்டுக்கள்
அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்பதுடன், அவை சுயாதீனமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கடுக்கப்படும்
அதிவேக வீதியை பராமரிப்பதற்காக புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களை பராமரிப்பதற்காகவும் புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திறந்த வெளி விமான சேவையொன்றை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திகன, பதுளை, புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ளக விமான சேவைக்கான விமான நிலையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா விமான சேவை மிக பின்தங்கிய நிலையில் முன்னெடுக்கப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் மோசடிக்காரர்களின் செயற்பாடுகளே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா விமான சேவையை புனரமைக்கப்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
ஸ்ரீலங்கா விமான சேவை எவ்வித அரச தலையீடுகள் காணப்படாது என தான் உறுதியளிப்பதாக ரவி கருணாநாயக்க உறுதி அளித்துள்ளார்.
காவற்துறையின் சம்பள முரண்பாடுகள் 2 ஆண்டுகளில் தீர்க்கப்படும்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவூக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கிடு
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கம் இலவவச வை-பை முறை திட்டம்
இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் இலங்கையிலேயே உற்பத்தி  செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கீரி சம்பா 50 ரூபாவாகவும், சம்பா 41 ரூபாவாகவும், நாடு 38 ரூபாவாகவும் நிர்ணய விலையில் அரசினால்  விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதாக வழங்கிய உறுதி மொழி நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அவர்களுக்காக 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் எண்ணி்க்கையை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கான வாகன கொள்வனவு நிறுத்தப்பட்டு, குத்தகை அடிப்படையில் வாகனங்கள் எடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்தார்.
75 வயதுடைய சகல பிரஜைகளுக்கும் வைத்திய காப்புறதி வழங்குமாறு சகல காப்புறுதி நிறுவனங்களிடமும் கோரிக்கை
தேசிய மருத்துவ துறையை மேம்படுத்த திட்டம் மேலும் அது தெடர்பக சலுகை வழங்க திட்டம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் ஒருவரது ஆகக்குறைந்த சம்பளம் 300 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
கீரி சம்பா 50 ரூபாவாகவும், சம்பா 41 ரூபாவாகவும், நாடு 38 ரூபாவாகவும் நிர்ணய விலையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றின் வரி 25 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
குழந்தைகளுக்காக பால்மா பெக்கட் ஒன்று 100 ரூபாவால் குறைவடைந்துள்ளது
நெத்தலிக்கான சில்லறை விலை 410 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பருப்பின் விலை 169 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோகிராம் கடலையின் விலை 160 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரின்மீனின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

Wednesday, November 4, 2015

சுனாமி என்றால் என்ன?


Advertisement



கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம்.கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும். சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்து தான் வந்தது. இதற்கு துறைமுகம் மற்றும் அலைகள் என்று பொருள். சிறிய உயரமுடைய அலைகள், சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின்றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில், அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர், தரைப்பகுதிக்குள் ஊடுருவும். பின், இந்த பெரிய அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே, தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும்.சுனாமி அலைகளின் தாக்கத்துக்கு பின், அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும். இப்படி கடல்நீர் சுனாமி அலையின் மூலம் இடம் பெயர்வதால், முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும், நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.


ஜெட் வேகத்தில் சீறும் சுனாமி : * கடற்பரப்புக்கு கீழ், கண்ணுக்கு தெரியாத சிறிய வடிவத்தில் சுனாமி உருவாகும். கடலின் மேல் பகுதியில் இருக்கும் கப்பலில் கூட, சுனாமி உருவாவதை உணர முடியாது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே, இந்த சுனாமி மிகப்பெரிய அளவில் உருவாகி, கடல் பரப்பு முழுவதும் வேகமாக பரவும்.
* சுனாமி என்பது ஒரே ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்கு சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாக கருதப்படுகிறது.
* சுனாமி அலைகள் கரையை நோக்கி அதிவேகமாக சீறிப் பாய்ந்து செல்லும்போது, கடலுக்குள் இருந்த தண்ணீரின் கணிசமான பகுதி காலியாகி விடும். கடலின் கீழ்ப்பரப்பில் உள்ள பவளப் பாறைகள் கூட, கண்ணுக்கு தெரியும். அந்த அளவுக்கு, தரைப்பகுதி தெரியும்.
* சுனாமி அலைகள் மிகவும் பிரமாண்ட உயரத்தில் வருவதால்தான், அழிவு ஏற்படுவதாக தவறான கருத்து கூறப்படுகிறது. கடலில் உள்ள பெரும்பகுதி தண்ணீர், வெள்ளமென புறப்பட்டு வருவதன் காரணமாகவே அழிவு ஏற்படுகிறது. கடலில் இருந்து வேகமாக வரும் வெள்ளம், அதன் பாதையில் உள்ள அனைத்து பொருட்களையும் துவம்சம் செய்து விடும். இதன்பின், அந்த நீர் வேகமாக கடலுக்கு திரும்பும். சுனாமி அலைகள் கரையை நோக்கி வரும்போது, ஒருசிலர், அதை சமாளித்து தப்பி விட முடியும். ஆனால், சுனாமி அலைகள், கடலை நோக்கி வேகமாக திரும்பும்போது, கடலுக்குள் எல்லாமே அடித்துச் செல்லப்படும்.

உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் : இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை:
1700, ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள்.
1755, நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்
1868, ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள், தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்
1946, ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்.
அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள்.
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது.

எப்படி சமாளிக்கிறது ஜப்பான்?ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்த நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவை பெருமளவில் பயனளித்து வருகின்றன.
* 1952ல் ஜப்பான் வானிலை மையத்தால் (ஜே.ஏ.எம்.,) சுனாமி எச்சரிக்கை சேவை துவங்கப்பட்டது.
*பசிபிக் பிராந்தியத்தில் இயங்கி வரும், ஆறு கண்காணிப்பு மையங்களில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை, இந்த எச்சரிக்கை மையம் பெற்று உரிய நேரத்தில் அரசுக்குத் தகவல் அளிக்கும்.
*நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்றே நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கையையும் ஜே.ஏ.எம்., விடுக்கும்.
* அதையடுத்து தேசிய ஒளிபரப்பு நிலையமான என்.எச்.கே., நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை விரிவாக வெளியிடும்.
* நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், பொது இடங்களில், அவசர அறிவிப்புக்காக ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூலம் மக்கள் உஷார் படுத்தப்படுவர்.
*நிலநடுக்கம் ஏற்பட்டால் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற, முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு அருகில், நிலநடுக்கப் பாதுகாப்பு மையங்கள் எங்கெங்கு உள்ளன என்று இளைய தலைமுறை
யினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதேபோல், கடுமையான நிலஅதிர்வைத் தாங்கும் வகையில் அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புகள், வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. வழக்கமான செங்கல், மணல் அல்லாமல் ரப்பர், பைபர் போன்றவற்றாலும் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறைக்கப்பட்டுள்ளது.
* கடுமையான அதிர்வு ஏற்படும்போது, புல்லட் ரயில் சேவைகள் மற்றும் அணு உலைகள் தானியங்கி முறை மூலம், உடனடியாக இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி விடும்.

பசிபிக் கடல் பகுதியில் அச்சத்தில் பல நாடுகள் : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பயங்கரமான சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. இதனால் எச்சரிக்கை அடைந்த அமெரிக்க நிலவியல் நிபுணர்கள், அதன் விளைவு குறித்து ஆராய்ந்தனர். ஜப்பானின் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால், அங்கு புறப்படும் சுனாமி அலை மணிக்கு 500 மைல் வேகத்தில், பசிபிக் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளை 24 மணி நேரத்திற்குள் தாக்கும் என்பதால், அப்பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலைகளின் உயரம்15 அடி முதல் 21 அடி உயரம் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குவாம், தைவான், ஹவாய், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, சமாவோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹவாய், வட அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் நிகரகுவா, தென் அமெரிக்காவின் பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.இவை தவிர சிறு தீவு நாடுகளான பிஜி, கவுதமாலா, எல் சல்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், ஹவாய் தீவுக்கு சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உடனடியாக ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் இருந்து, உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.ஜப்பானின் வடபகுதியில் உள்ள குரில் தீவுகளில் இருந்து, 11 ஆயிரம் மக்களை ரஷ்ய அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி ஏற்படுவது குறித்து, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த பால் கன்னலி கூறுகையில்,"இதுபோன்ற இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதுதான் எங்களது பெரும் கவலையாக உள்ளது. இந்த சுனாமி அந்த நாடுகளுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் தான் இருக்கும்' என்று தெரிவித்தார்.

பூமிக்கு அருகே சந்திரன் அழிவுக்கு பஞ்சமில்லை : பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 19 ஆண்டுகளுக்குப் பின், வரும் 19ம் தேதி 2,21,567 கி.மீ., தூரத்தில் வருகிறது. எப்போதெல்லாம் சூரியனுக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.பூமிக்கு அருகில் சூரியன் இம்முறை வருவதற்கு, "சூப்பர் மூன்' என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாக காணப்படும்.விஞ்ஞானிகள் கணித்ததை போல், ஜப்பானில் சுனாமி கோரம் அரங்கேறியுள்ளது. கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்துள்ளன. 1974 ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப் போட்டது. 1995ம் ஆண்டு ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுக்கதிர் வீச்சை தடுக்க ஜப்பானில் அவசர நிலை : ஜப்பானின் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மிக பயங்கரமான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டன.

எரிமலை வெடிப்பு: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்கள் கழித்து, இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசியா தீவுக் கூட்டத்தில் உள்ள சியாவூ தீவில் உள்ள கரங்கடெங் எரிமலை வெடிக்க துவங்கியுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 5,853 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலையில் இருந்து நேற்று நெருப்புக் குழம்பும், புகையும் வெளிப்பட துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் அணு உலைகள்: ஜப்பானில் மொத்தம் 53 அணு உலைகள் உள்ளன. இவற்றில் இருந்து 34.5 சதவீதம் மின்சாரம் உற்பத்தியாகிறது. மிக அதிகளவில் அணு உலைகள் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பானுக்கு 3வது இடம்.தற்போது சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில், ஒனகாவா, ஹிகாஷிடோரி, புக்குஷிமா, டோக்காய், டொமரி ஆகிய ஐந்து அணு உலைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலநடுக்கத்தில், ஒனகாமாவும், புக்குஷிமாவில் உள்ள சில பிரிவுகளும் இயங்கவில்லை. பேரழிவு மற்றும் அபாய காலங்களில் இவை தாமாகவே இயங்காத அமைப்பைக் கொண்டவை. அணுக்கதிர் வீச்சு அபாயத்தை தடுக்க "அணு சக்தி மின்சார அவசர நிலையை' அரசும் அறிவித்தது.

ஜப்பான் சுனாமியில் சிக்கிய ஆயிரம் பேரின் கதி என்ன?ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் ஆயிரம் பேரை காணவில்லை. இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நேற்று 8.9 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர சுனாமியால், செண்டாய் உள்ளிட்ட நகரங்கள் மூழ்கின. செண்டாய் நகரில் உள்ள வகாபாயாஷி பகுதியில் 300 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்தவர்களை காணவில்லை. சென்டாய் - இஷினோமேகி பகுதிக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. இதே போல, ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை காணவில்லை. எனவே, சுனாமியால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Friday, October 30, 2015

விக்கினேஸ்வரன்

அரசாங்கம் தான் நினைத்ததை திணித்து இது தான் நல்லிணக்கம் என்று கூறுவதில் பயனில்லை! விக்கினேஸ்வரன்
[ புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2015, 03:46.58 PM GMT ]
மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களிடம் திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.
இதன்போது அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது,
வடமாகாணத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகள் இருப்பதுடன், அவர்களில் 25 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.
சமுதாயத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டால், அது வரும் காலத்தில் நன்மைகளைப் பயக்காது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களுக்கு திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை. உண்மைகளை அறிந்து, மக்களுக்கு என்னசெய்ய வேண்டு மென்று அறிந்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல், மிக நன்மைகள் பயக்கும் கலந்துரையாடலாக அமைந்துள்ளதென்று, வடமாகாண முதலமைச்சர் மேலும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
குறிப்பாக, வடமாகாண பெண்களுக்கு இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Charity Sri Lanka.


we have a burden about the poor children and widows in the Sri Lanka, about 80000 widows are living northern province in the Sri Lanka.  and lot of poor children also living in the many remote areas, and they need help.

And the king will answer them, ‘I tell you the truth, just as you did it for one of the least of these brothers or sisters of mine, you did it for me.’ (St Matt 25:40 [NET])

He that giveth unto the poor shall not lack: Pro 28:27.

Please Contact Us
email: jfamily6866@gmail.com
Phone: 0094771012083

Our Bank Details.

ASSEMBLY  OF  GOD  CHURCH, PEOPLE'S   BANK .PASSARA  BRANCH, 
Sri Lanka.  ACC NO. 116200160053965




























Thursday, October 29, 2015

மூக்கு இல்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணுடன் காணப்படுகின்றது.

எகிப்து நாட்டின் எல்சென்பெல்லா வெய்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மூக்கு இல்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணுடன் காணப்படுகின்றது.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது, கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் பாதிப்பால், கருவில் இருக்கும் இழந்தைக்கு இத்தகைய குறைபாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த குழந்தை இன்னும் ஒரு சில நாட்களே உயிர்வாழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அந்த குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6df121d9-2bb7-422e-88bc-89e032ef61b5_ORIGINAL

Monday, October 5, 2015

படையினரைக் காப்பாற்றவா போர்க்குற்ற விசாரணை?

படையினரைக் காப்பாற்றவா போர்க்குற்ற விசாரணை?
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஒக்ரோபர் 2015, 02:48.51 AM GMT ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.
இதுபோலத்தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போருக்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியது விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் தான் என்றும், அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்வதில் என்ன நியாயம்? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இவ்வாறாக அரசாங்கத் தரப்பில் உள்ளவர்கள் ஒருபக்கத்தில் ஐநா விசாரணைக்குழுவின் பரிந்துரைகளையும் ஐநா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்வதாக கூறினாலும் இன்னொரு புறத்தில் அதற்கு முரணான கருத்துகளையே வெளியிட்டு வருகின்றனர்.
அதாவது நம்பகமான விசாரணைகள் நடத்தப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் சர்வதேச அரங்கில் வாக்குறுதி கொடுக்கின்ற அரசாங்கம் தான் படையினரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தப் போகிறோம் என்று கூறி வருகிறது.
இவ்வாறானதொரு நிலையில் நடக்கப் போகும் விசாரணைகள் விடயத்தில் தமிழ் மக்கள் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில் அரசபடைகளும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்களை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் போது போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று நிரூபிக்கக் கூடியதாக இருக்கும் என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் கூறியிருக்கிறார்.
அரச படையினர் மருத்துவமனைகள் மீதும், பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தியதைக் கண்டறிந்துள்ளதாகவும், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பெண்களுக்கெதிரான வல்லுறவுகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதை விசாரணைகளில் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இராணுவத்தின் மீது ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெளிவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற நிலையிலும் கூட படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையை நடத்தக் கோருகிறோம். படையினரைத் தண்டிக்க அனுமதியோம். ஒரு தரப்புக்கு மட்டும் தண்டனை கொடுக்கப்படுவது அநீதி என்றெல்லாம் அரசதரப்பு கூறுவது முரண்பாடாக உள்ளது.
கடந்த மாத நடுப்பகுதியில் ஐநா விசாரணை அறிக்கை வெளியான போது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு தண்டனை விலக்குரிமை பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவருவேன் என்று கூறினார்.
இலங்கையில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினர் மற்றும் பொலிஸாரைப் பாதுகாக்க இத்தகைய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட வரலாறு உள்ளது.
அதையே தாம் மீண்டும் கொண்டுவரப் போவதாக கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
அவ்வாறானதொரு சட்டத்தை கொண்டுவந்தால் சர்வதேச அரங்கில் ஏற்கனவே தண்டனையில் இருந்து தப்பிக்கும் போக்கு குறித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இலங்கை மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்.
அதைச் சுட்டிக்காட்டாத பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிலர் பொதுமன்னிப்புத் தீர்மானத்தை பாராளுமன்றில் கொண்டுவரப் போவதாக கூறுகின்றனர்.
நாங்களோ போர்க்குற்றம் நடந்தது என்று ஏற்கவேயில்லை, ஆனால் இவர்கள் போர்க்குற்றங்கள் நடந்தது. தாமே குற்றவாளிகள் என்று முட்டாள்தனமாக ஒப்புக்கொள்ள முனைகின்றனர் என்று விசனத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனோபாவம் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை மட்டுமன்றி, முன்னைய அரசாங்கத்தையும் கூட பாதுகாக்க அரசாங்கம் முற்படுகிறது என்பதைத் தான் காட்டுகிறது.
இந்த விடயத்தில் அரசாங்கத்தில் உள்ளவர்களை விட அரசாங்கத்துக்கு வெளியில் உள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற ஒரு சிலர் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
போர் நடந்த காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
தாமே இராணுவத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் போர்க்குற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஆனாலும் இராணுவத்தில் உள்ள சிலர் தவறான வழிநடத்தல்களினால் குற்றங்களை இழைத்திருக்கலாம் என்றும் அவ்வாறானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதைவிட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எத்தகைய விசாரணைகள் எங்கு நடத்தப்பட்டாலும் அதற்கு ஒத்துழைக்கத் தயார் என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை அனுபவிக்கவும் தயார் என்றும் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
ஆனால் இத்தகைய தெளிவுடன் அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் கருத்து வெளியிடுவதை காண முடியவில்லை.
அவர்கள் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர்.
இப்போதைய நிலையில் போர்க்குற்ற விசாரணை என்பது படையினரையோ முன்னைய ஆட்சியாளரையோ முன்வைத்து இடம்பெறவில்லை என்பதையும் அவர்களைத் தண்டிக்க இடமளியோம் என்பதையும் வெளிப்படுத்துவதில் தான் அரசாங்கம் கூடிய அக்கறை காட்டுகிறது.
ஏனென்றால் சிங்கள மக்களும், படையினரும், இந்த விசாரணைகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் நிலை ஏற்பட்டால் இப்போதைய அரசாங்கத்தினால் தாக்குப் பிடிக்க முடியாது.
எனவே தான் சிங்கள மக்களையும் படையினரையும் சமாளிக்கப் பார்க்கிறது.
வெளிநாட்டுத் தலையீட்டுடன் கூடிய விசாரணைக்கு இணங்கினாலும் அவ்வாறு நடக்காது என்று நம்ப வைக்க முயற்சிக்கிறது.
படையினரைத் தண்டிக்க விடமாட்டோம் என்றும் கூறுகிறது.
ஆனால் நம்பகமான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் நிச்சயமாக படையினரைப் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க முடியாது.
ஏனென்றால் ஏராளமான குற்றங்களுக்கு சாட்சிகளும் இருக்கின்றனர், சான்றுகளும் இருக்கின்றன.
அவற்றை வைத்து குற்றங்களை நிரூபிக்க போதிய வாய்ப்புகளும் உள்ளன.
ஐநா மனித உரிமை ஆணையாளரின் உரையிலும் அவரது விசாரணைக்குழுவின் அறிக்கையிலும் இதுபற்றித் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
அதேவேளை விசாரணைகளின் பின்னர் குற்றம் காணப்படுவோர் மீதும் இந்த அரசாங்கம் இதே கருணையை வெளிப்படுத்துமேயானால் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லியக்கச் செயற்பாடுகள் முழுமையேடையாது போகும்.
ஏனென்றால் பொறுப்புக்கூறல், நல்லிணக்கச் செயற்பாடுகளில் தனியே சிங்கள மக்களுக்கும், படை்யினருக்கும் நம்பிக்கையூட்ட வேண்டிய பொறுப்பு மட்டும் இந்த அரசாங்கத்துக்கு இருக்கவில்லை.
இவர்களுக்கும் அப்பால், இந்தப் போரினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட தமிழ் மக்களினதும் நம்பிக்கையையும் பெற வேண்டும்.
அரசாஙகத் தரப்பில் உள்ளவர்கள் வெளியிடுகின்ற கருத்துகள் சிங்கள மக்களை திருப்திப்படுத்துகிறதோ இல்லையோ தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
இத்தகைய போக்கு தொடர்ந்து சென்றால் அது எதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படக் கூடிய எந்தவொரு பொறுப்புக்கூறல், நல்லிணக்கச் செயன்முறைகளாலும் முன்னேற்றத்தை எட்ட முடியாது போகும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் இன்னும் 18 மாதங்களில் அரசாங்கத்தை மீண்டும் ஜெனிவாவில் தலைகுனிந்து நிற்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சுபத்ரா

moon red

வானில் தோன்றிய அதிசய ”இரத்த” நிலா: அட்டகாசமான புகைப்படங்கள்

Published:Monday, 28 September 2015, 07:49 GMTUnder:General
33 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அதிசய இரத்த நிலா நேற்று உலகின் பெரும்பாலான இடங்களில் தென்பட்டது. அதன் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ,
- See more at: http://www.manithan.com/news/20150928116994#sthash.aBfajMPg.dpuf

Thursday, September 24, 2015

God’s Given Duty

God’s Given Duty
(Judges 9:7~15)


God
is truthful.
He
sent His word to the world and that word is truthful (Matt 5:18);
He created all things and thus they are truthful (Heb 11:3);
the prophets He sent are truthful,
the Holy Son of God
whom He sent is truthful (Jn 1:14),
and the Truth is truthful (Jn 14:6).
The disciples whom Jesus called were martyred, for they were truthful;
the 144,000 who will stand before the Lord
on the last day were sealed because they are truthful (Jn 14:5).
Thus
the anointed souls are the truthful ones,
and the church of Jesus Christ is a truthful assembly (Rev 12:17).
God helps the truthful, for He is truthful (Ps 140:13),
and the truthful ones
will be glorified in Heaven on the day of the Lord Jesus’ return (Rev 22:14-15).
As the Spirit of Truth, the Holy Spirit is truthful (Jn 16:13)
and God the Paraclete who comforts the truthful saints
is the same forevermore (Heb 13:8).
○The Devil is a liar and the father of lies.
Whoever belongs to him
is deceived by lies and speaks lies.
○Whoever belongs to the truthful God 
speaks words of truth,
which comes only from the Bible.
○What is our problem?
Woe will befall us on account of false testimonies.
Therefore we must be truthful.
※Let us be truthful in our life of faith,
for God seeks such people.
He seeks those who are truthful in their duties. 

God is truthful
God is truthful. Jesus described God as “the true God” because God is truthful (Jn 17:3). God neither breaks nor changes His word. Numbers 23:19 says, “God is not a man, that He should lie, nor a son of man, that He should repent. Has He said, and will He not do? Or has He spoken, and will He not make it good?”  
                    
With God’s word, not one jot or tittle will ever pass away, and will all be fulfilled (Mt 5:18). On the first day of creation, God said, “Let there be light!” and it was so. Of all the words He had spoken thereafter, not one failed and all were fulfilled. God said to Adam, “But of the tree of the knowledge of good and evil you shall not eat, for in the day that you eat of it you shall surely die” (Gen 2:17), and indeed Adam became separated from the life of God, and inevitably subject to eternal punishment. Thus in order to save Adam, even God had no choice but to fulfill His own words that said ‘you will surely die’, in place of Adam.

God declares righteousness by His truthfulness (Isa 45:19). When Jesus was baptized and came out of the water, God said, “This is My beloved Son, in whom I am well pleased” (Mt 3:17). This was God’s truth without a vestige of anything false. God regards His beloved and pleasing Son as righteousness. And if anyone believes in this truth of God which has declared His righteousness, God counts that person as righteous.

God communes with the truthful
God communes with those who are truthful (Pro 3:32). As the pastor blesses the saints by saying, “The communion of the Holy Spirit be with you all”, who is it that is able to commune with God? The truthful ones. If people are praying but not receiving answers, it’s not because God hasn’t kept His promise but because they are not truthful. If we want to successfully deliver our prayers to God, we must first become truthful, sincere Christians.

As the word of God is truthful and His Son is truthful, those whom He has called are also truthful. Concerning the 144,000 sealed among Israel, Revelation 14:5 says, “And in their mouth was found no deceit, for they are without fault before the throne of God.” Whoever lies cannot join in the ranks of those who are sealed. Then Revelation 22:15 describes those who speak lies as, “But outside are dogs and sorcerers and sexually immoral and murderers and idolaters, and whoever loves and practices a lie.” Those that are not truthful cannot enter the glorious city into which only the ones who have been sealed will later go, for there cannot be lies in that city.

Our faith must be sincere. If we confessed our faith before God, it shouldn’t ever change. In the church there are two offices for which a person is ordained. One is a pastor, the other is a deacon. There is a condition to be met by anyone ordained into any of these offices, that is, they musn’t be double-tongues (1 Tim 3:8). If someone who vows, “I will devote my life as a deacon of our church” and is ordained, lets down the church by not keeping his vows, he is a double-tongued person in God’s eyes. God will deal most severely with such a person.

Keep your promise with God
Jesus is the Christ. Jesus is the name of God which was revealed to us by the Son of God; Christ is His duty. In the word Christ is embedded the meaning ‘anointed and sent’. During the Old Testament time, kings, priests and prophets were anointed and thus appointed. In the same way, God’s Son was appointed with a duty when He came to the world, and He bore His duty to the point of death.

There’s a fable in Judges 9:8-15 about the trees trying to ordain a king over them. One day, the trees went out and tried to make the olive tree their king. But the olive tree said, “Should I cease giving my oil, with which they honor God and men, and go to sway over trees?” The trees went to the fig tree but the fig tree replied, “Should I cease my sweetness and my good fruit, and go to sway over trees?” The grape vine, in like manner refused the trees’ request and answered them saying, “Should I cease my new wine, which cheers both God and men, and go to sway over trees?” But the thornbush said, “If in truth you anoint me as king over you, then come and take shelter in my shade; but if not, let fire come out of the bramble and devour the cedars of Lebanon!” While the other trees clearly knew their own duties and was faithful to the end, the thornbush was different.

Each and every saint has his or her duty to carry out in the church. Though the duties may vary, not one is regarded unimportant. The sad thing is that people promise to faithfully serve the church, only to go back on their words soon after. Can such double-tongued people join in the ranks of those who have been sealed? 

Our faith is not about following our own conviction but the words of Jesus Christ. The Israelites, who were in slavery in Egypt, crossed the Red Sea and came into the desert. The church life of a Christian is like the life of the Israelites in the desert (Acts7:38). A desert is a waterless place. The way that the Israelites could survive there was because they drank the water from the rock. 1 Corinthians 10:4 says, “And all drank the same spiritual drink. For they drank of that spiritual Rock that followed them, and that Rock was Christ”. We obtain faith from the word that comes from Jesus Christ, who is the Rock. Romans 10:17 says, “Faith comes by hearing, and hearing by the word of Christ”.

A sincere and truthful saint observes the Lord’s Day as holy. Jesus said, “The Son of Man is also Lord of the Sabbath” (Mark2:28). Jesus Christ is Lord of the Sabbath, as well as the Lord’s Day which is the fulfillment of the Sabbath. Saints who have received the grace of Jesus Christ ought to separate the Lord’s Day as holy and worship God on that day. Hebrews 10:23-25 says, “Let us hold fast the confession of our hope without wavering, for He who promised is faithful. And let us consider one another in order to stir up love and good works, not forsaking the assembling of ourselves together, as is the manner of some, but exhorting one another, and so much the more as you see the Day approaching”, and verse 26-27 says, “For if we sin willfully after we have received the knowledge of the truth, there no longer remains a sacrifice for sins, but a certain fearful expectation of judgment, and fiery indignation which will devour the adversaries”.

A certain person asked me, “Pastor, I was unemployed and in hardship for so long, but I found a really good job recently. But there’s one problem. I won’t be able to attend the Lord’s Day service if I start working. What should I do?” In the interest of the person, I wish I could answer, “I guess there’s not much choice. God will probably understand your difficult situation”. However if I do say that, he’ll probably make excuse saying, “The pastor told me to do that”. Making one’s choices is up to the individual person. And the consequences that follow those decisions will also be for each person to bear. Deuteronomy 30:19 says, “I call heaven and earth as witnesses today against you, that I have set before you life and death, blessing and cursing; therefore choose life, that both you and your descendants may live”. 

Jesus said, “You are of your father the devil, and the desires of your father you want to do. He was a murderer from the beginning, and does not stand in the truth, because there is no truth in him. When he speaks a lie, he speaks from his own resources, for he is a liar and the father of it” (Jn 8:44). He declared that a double-tongued person is influenced by the traits passed onto them from the Devil. God knows better than anyone else that our flesh is weak. There lies the reason He sent Christ to us. Even so, when it comes to our faith, we must faithfully keep our promises with God.

God keeps His promises. The Son of God was certain that the Father will keep His promise and thus obeyed the Father to the point of death on the cross. God the Father then kept His promise by raising His Son from the dead. Acts 2:32 says, “This Jesus God has raised up, of which we are all witnesses.” The relationship of God the Father and His Son is that of trust. The Son who trusted the Father’s words obeyed Him unto death, and God the Father raised His Son to life just as He promised. 

Jesus has invited us to be part of this relationship of the Father and the Son. Jesus prayed, “Now I am no longer in the world, but these are in the world, and I come to You. Holy Father, keep through Your name those whom You have given Me, that they may be one as We are” (Jn 17:11). For us to have inherited the name Jesus means we have established a father-son relationship with God. Just as a father doesn’t lie to his child, God has been sincere and truthful to us. Therefore, we also must not be double-tongued before God.

Be faithful to your duty to the end
Just as the Son of God obeyed and fulfilled His duty as Christ completely, we also need to bear our God-given duties to the end, now that we have also become God’s children. Romans 8:9 says, “Now if anyone does not have the Spirit of Christ, he is not His”. Whoever doesn’t have Christ’s DNA, that is, whoever is double-tongued and lies before God, cannot be a man of Christ.

People who don’t believe in Jesus Christ even mock God. Nevertheless, God doesn’t punish them straight away. On the earth, even idolaters are able to make a lot of money. God leaves the worldly people to do whatever they do in their flesh, because their soul has already been condemned. Thus there’s no reason to envy their prosperity, for their feet are set on slippery places (Ps 73:1-28). 

People may have struggles with others while discharging their duty at church. And one’s duty may even hinder their work to make a living. Situations may arise where one considers them more important than carrying out his duties. What we need to remember in those times is that, everything we do is only possible because God is giving us breath. The moment God takes away our breath, our flesh will cease doing its work and eventually return to dust.

If anyone has been commissioned by God, his constant interest and concern should be in the church’s needs. Whilst some people are busy trying to go home as soon as the worship service is over, if one has been entrusted with a duty because God considered him to be faithful, then he must look around to see if there is anything he should do for the church even if the service has finished. And soon he will begin to notice souls who need a heartfelt word of comfort, newcomers who haven’t been at church for very long, or work that has long been neglected by others.

Christians are those who have the spirit of Christ, that is, those who have been commissioned. The hearts of those discharging their duties must be truthful. The olive tree, the fig tree, and the grapevine recognized just how precious their duties were – to cheer both God and man – and were faithful to the end. The rest of the trees tried to persuade them that they were worthy to be king, yet they treasured their duty more than become king. 

God communes with those who are truthful. We must ensure that not only ourselves, but our family and children all fellowship with God. Though our flesh is weak, we must be sincere when it comes to faith. Suffering will surely follow in discharging our duties. Even so, we must carry out our God-given duties without being double-tongued before God. And God will fill such souls with His blessed joy.