Monday, March 11, 2019

நான் எனது விசுவாசத்தை இயேசுவின்மேல் வைத்திருக்கிறேன்... இப்பொழுது அடுத்து என்ன?

நான் எனது விசுவாசத்தை இயேசுவின்மேல் வைத்திருக்கிறேன்... இப்பொழுது அடுத்து என்ன?


நான் எனது விசுவாசத்தை இயேசுவின்மேல் வைத்திருக்கிறேன்... இப்பொழுது அடுத்து என்ன?
வாழ்த்துக்கள்! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிற ஒரு தீர்மானத்தை எடுத்து இருக்கிறீர்கள்! "இப்பொழுது என்ன?" தேவனோடு எனது பயணத்தை எப்படி ஆரம்பிப்பது? வேதாகமத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து படிகள் வேதாகமத்திலிருந்து உங்களுக்கு சரியான திசையைக் காண்பித்து வழி நடத்தும். உங்களுடைய இந்த பயணத்தில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் எழுமாயின் www.GotQuestions.org என்கிற இணையதளத்திற்கு சென்று உங்கள் கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ளுங்கள். 

1. இரட்சிப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

"உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்" என 1 யோவான் 5:13 கூறுகிறது. நாம் இரட்சிப்பு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார். மேலும் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிற விஷயத்தில் திடநம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். இரட்சிப்பை பற்றிய முக்கியமான குறிப்புகளை சுருக்கமாக ஆராய்வோம் வாருங்கள்: 

(a) நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். நாமெல்லாரும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்திருக்கிறோம் (ரோமர் 3:23). 

(b) நாம் செய்த பாவத்தின் நிமித்தமாக தேவனை விட்டு நித்திய காலமாக பிரிந்திருக்கிற தண்டனைக்குள்ளானோம் (ரோமர் 6:23). 

(c) நம்முடைய பாவங்களுக்குரிய தண்டனையின் விலையை செலுத்துவதற்காக இயேசு சிலுவையில் மரித்தார் (ரோமர் 5:8; 2 கொரிந்தியர் 5:21). நாம் அடைய வேண்டிய தண்டனையை தம்மேல் ஏற்றுக்கொண்டு இயேசு நம்முடைய ஸ்தானத்தில் மரித்தார். அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்ததன் மூலம் நம்முடைய பாவங்களுடைய தண்டனையை போக்க அவருடைய மரணம் போதுமானது என்பதை நிரூபித்தார். 

(d) இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து நாம் அடைய வேண்டிய தண்டனையை தம்மேல் ஏற்றுக்கொண்டு இயேசு நம்முடைய ஸ்தானத்தில் மரித்தார் என்பதை நம்புகிற யாவருக்கும் தேவன் மன்னிப்பையும் இரட்சிப்பையும் அருளுகிறார் (யோவான் 3:16; ரோமர் 5:1; ரோமர் 8:1). 

இதுதான் இரட்சிப்பின் செய்தி! நீங்கள் உங்கள் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்து அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருந்தால், நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கிறீர்கள்! உங்களுடைய எல்லா பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் தேவன் நான் உங்களை விட்டு விலகாமாட்டேன் மற்றும் உங்களை கைவிடமாட்டேன் என வாக்கு பண்ணியிருக்கிறார் (ரோமர் 8:38-39; மத்தேயு 28:20). உங்கள் இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவில் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் (யோவான் 10:28-29). நீங்கள் உங்களது முழு நம்பிக்கையையும் இயேசுவின் மேல் மட்டும் வைத்து அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்களானால், நீங்கள் உங்கள் நித்யத்தை தேவனோடு பரலோகத்தில் செலவழிக்கலாம் என திடநம்பிக்கையோடு இருக்கலாம்! 

2. வேதாகமத்தை சரியாக போதிக்கிற ஒரு நல்ல திருச்சபையை கண்டுபிடியுங்கள்.

சபை என்றதும் கட்டிடத்தை சபை என்று கருதிவிட வேண்டாம். சபை என்றால் மக்கள். இயேசு கிறிஸ்துவிற்குள் இருக்கிற விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தில் இருப்பதும் வளருவதும் மிகவும் முக்கியமான காரியமாகும். சபையின் முதன்மையான நோக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இப்பொழுது நீங்கள் உங்கள் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின்மேல் வைத்திருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் இருக்கிற இடத்தில் வேதாகமத்தை விசுவாசிக்கிற மற்றும் சரியாக போதிக்கிற ஒரு நல்ல சபையை கண்டுபிடித்து உங்களை அந்த ஐக்கியத்தில் இணைத்து கொள்ளுங்கள். அந்த சபை போதகரோடு நீங்கள் புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டு புது ஜீவன் பெற்றவர் என்பதை தெரிவியுங்கள். அவர் நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு புதிதாக விசுவாசத்திற்குள் வந்தவர் என்பதை அறிந்து கொள்ளட்டும். 

சபையின் இரண்டாவது பிரதான நோக்கம் என்னவென்றால், வேதாகமத்தை உள்ளதுபோலவே சரியாக போதிப்பதாகும். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் கைக்கொண்டு நடக்கத்தக்கதான தேவனுடைய அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை வேதாகமத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாம். வேதாகமத்தை சரியாக புரிந்து கொள்ளுகிற காரியம்தான் வலிமையான மற்றும் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு திறவுகோலாக இருக்கிறது. "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:16-17). 

சபையின் மூன்றாவது நோக்கம் "ஆராதனை". ஆராதனை என்பது தேவன் செய்த எல்லா காரியங்களுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துதல் ஆகும். தேவன் நம்மை இரட்சித்திருக்கிறார். தேவன் நம்மை நேசிக்கிறார். தேவன் நமது தேவைகளை சந்திக்கிறார். தேவன் நமக்கு வழிகாட்டி நம்மை வழிநடத்துகிறார். இப்படியிருக்க எப்படி நாம் அவரை துதியாமல் இருக்கமுடியும்? தேவன் பரிசுத்தமுள்ளவரும், நீதியுள்ளவரும், அன்புள்ளவரும், இருக்கமுள்ளவரும் கிருபை நிறைந்தவருமாக இருக்கிறார். "கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்" என வெளி. 4:11 கூறுகிறது. 

3. தேவன் மேல் கவனம் செலுத்ததக்கதாக ஒவ்வொரு நாளும் அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.

தேவன் மேல் கவனம் செலுத்ததக்கதாக நாம் ஒவ்வொரு நாளும் அதற்கான நேரத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியமான காரியமாகும். சிலர் இதை "அமைதியான நேரம்" என அழைக்கிறார்கள். மற்ற சிலர் இதை "தியானங்கள்" என அழைக்கிறார்கள். காரணம் நாம் தேவனோடு நம்மை ஈடுபடுத்திக்கொண்டு அவரை தியானிக்கின்ற நேரமாகும். சிலர் காலை நேரங்களில் இதற்காக நேரத்தை ஒதுக்குவார்கள். வேறு சிலர் மாலை நேரங்களில் இதற்காக நேரத்தை ஒதுக்குவார்கள். இந்த நேரத்தை நீங்கள் எப்படி அழைத்தாலும் எப்பொழுது ஒதுக்கினாலும் அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்கள் அனுதினமும் இவ்வகையில் நேரத்தை தேவனோடு செலவழிக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். நாம் தேவனோடு நேரத்தை செலவிடும்போது எந்தெந்த காரியங்கள் எல்லாம் அதில் உள்ளடங்கியுள்ளன? 

(a) ஜெபம். ஜெபம் என்பது தேவனோடு பேசுதல் என்கிற சாதாரண விஷயமாகும். உங்களைக்குறித்த கவலைகள் மற்றும் பிரச்சனைகளை தேவனிடத்தில் கூறுங்கள். உங்களுக்கு தேவையான ஞானம் மற்றும் வழிநடத்துதலை கொடுக்கும்படி அவரிடம் கேளுங்கள். உங்களது தேவைகளை அவரிடத்தில் கூறி அதை சந்திக்கும் படி கேளுங்கள். அதேவேளை நீங்கள் எந்த அளவிற்கு அவரை நேசிக்கிறீர்கள் மற்றும் அவர் உங்களுக்கு செய்த காரியங்களை மறவாமல் அவரை துதித்து உயர்த்துகிறீர்கள் என்பதையும் அவரிடத்தில் கூறுங்கள். இதுதான் ஜெபம். 

(b) வேத வாசிப்பு. வேதாகமம் சபை, ஞாயிறு பாடசாலை, வேத ஆராய்ச்சி கூட்டம் போன்றவற்றில் போதிக்கப்பட்டாலும், நீங்கள் உங்களது அனுதின வாழ்வில் வேதாகமத்தை வாசிக்கவேண்டும். நீங்கள் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான அனைத்து காரியங்களும் வேதாகமத்தில் அடங்கியுள்ளன. தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல், ஞானமான தீர்மானங்களை எடுத்தல், பிறருக்கு எவ்வகையில் உதவி செய்தல் மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியை பெறுதல் போன்ற காரியங்களில் தேவனுடைய வழிநடத்துதல் நமக்கு இதில் உண்டாயிருக்கிறது. வேதாகமமானது தேவனுடைய வார்த்தையாகும். வேதாகமமானது நாம் நமது வாழ்வை தேவன் விருப்புகிற வகையிலும் நமக்கு திருப்தி அளிக்கிற நிலையிலும் எப்படி வாழவேண்டும் என்பதற்கான தேவனுடைய அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய கையேடு ஆகும். 

4. நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வளருவதற்கு உங்களுக்கு உதவி செய்து ஊக்குவிக்கும் நபர்களோடு உங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

"மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்" என்று 1 கொரிந்தியர்15:33 கூறுகிறது. தீய செயல்களை செய்யும்படி நம்மை உந்துகிற மக்களில் இருந்து வேறுபட்டு வாழத்தக்கதாக, வேதாகமம் அவர்களைப்பற்றிய எண்ணற்ற எச்சரிக்கைகளை நமக்கு கொடுக்கிறது. பாவமான காரியங்களை செய்கிறவர்களோடு நாம் நேரத்தை செலவழிக்கும் போது அவர்கள் செய்கிற தீய செயல்களை நாமும் செய்யத்தக்கதாக சோதனைக்குள்ளாவோம். அப்படிப்பட்டவர்களோடு உள்ள ஐக்கியம் நம்மை அவர்களுடைய சுபாவக்கரை படியும்படி செய்துவிடும். இதனிமித்தம் நாம் எப்பொழுதும் கர்த்தரை நேசிக்கிற மற்றும் அவருக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களோடு கலந்து சேர்ந்து இருக்கவேண்டும். 

உங்கள் சபையில் இருந்து உங்களுக்கு உதவி செய்கிற மற்றும் ஊக்குவிக்கிற ஓரிரு நண்பர்களை தேர்ந்தெடுங்கள் (எபிரேயர் 3:13; 10:24). உங்களுடைய அமைதி நேரம், தேவனோடுள்ள ஐக்கியம் மற்றும் இதர காரியங்களில் பொறுப்பெடுத்து உங்களை நடத்ததக்க நிலையில் இருக்கும்படி உங்கள் நெருங்கிய நண்பரிடம் கேளுங்கள். அவர்களுக்கும் நீங்கள் இப்படி இருக்க அவர்களிடம் கேளுங்கள். இதன் அர்த்தம் கிறிஸ்துவை அறியாத மற்ற அனைத்து நண்பர்களையும் விட்டு நீங்கள் விலக வேண்டும் என்கிற அர்த்தமல்ல, தொடர்ந்து அவர்களது நண்பராக இருங்கள் அவர்களை நேசியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை இரட்சித்தததையும் அவர்கள் செய்கிற எல்லா செயல்களையும் உங்களால் செய்ய இயலாது என சாதாரண நிலையில் கூறுங்கள். அவர்களிடம் இயேசுவைக் குறித்து கூறுவதற்கு உங்களுக்கு நல்ல சந்தர்ப்பங்களை கொடுக்க தேவனிடம் கேளுங்கள். 

5. ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளுங்கள்.

அநேகருக்கு ஞானஸ்நானம் குறித்து தவறான புரிந்துகொள்ளுதல் இருக்கிறது. ஞானஸ்நானம் என்னும் சொல்லின் அர்த்தம் "தண்ணீரில் மூழ்குதல்" என்பதாகும். ஞானஸ்நானம் என்பது வேதாகமப் பிரகாரம் ஒருவர் கிறிஸ்துவில் விசுவாசித்து புதிய வாழ்விற்குள்ளாக வந்ததையும் தொடர்ந்து இயேசுவையே பின்பற்றி செல்லுவேன் என்கிறதுமான தீர்மானத்தை வெளியரங்கமாக அறிக்கை செய்யும் ஓர் செயலாகும். தண்ணீரில் மூழ்குகிற இந்த செயல் கிறிஸ்துவோடு மரித்து அடக்கம்பண்ணப்பட்டதற்கு அடையாளமாக இருக்கிறது. தண்ணீரில் இருந்து வெளியே வருகிற செயல் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்த காரியத்திற்கு அடையாளமாக இருக்கிறது. ஆக ஞானஸ்நானம் எடுத்தல் என்கிற காரியம் இயேசுவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆவியவற்றோடு ஒப்பிட்டு காண்பிக்கிற ஓர் அடையாளமாக இருக்கிறது (ரோமர் 6:3-4). 

ஞானஸ்நானம் உங்களை ஒருபோதும் இரட்சிக்காது. ஞானஸ்நானம் உங்களுடைய பாவங்களை கழுவாது. ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மூலம் மட்டுமே இரட்சிப்பு என்று நீங்கள் வெளியரங்கமாக பண்ணுகிற ஒரு விசுவாச அறிக்கையை காண்பிக்கிற ஒரு கீழ்படிதலின் படி ஆகும். ஞானஸ்நானம் என்பது முக்கியமானதுதான், காரணம் இது நமது கீழ்படிதலைக் காண்பிக்கிறதாய் இருக்கிறது. மேலும் கிறிஸ்துவின்மேல் உங்களுக்கு இருக்கிற விசுவாசத்தை அறிக்கப்பண்ணுகிற தருணமாகவும் இருக்கிறது. நீங்கள் ஒருவேளை ஞானஸ்நானம் பெற ஆயத்தமாக இருந்தால், உங்கள் போதகரிடம் இதைக்குரித்து கூறுங்கள் அவருக்கு தெரிவியுங்கள். 

நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?


கேள்வி: நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

பதில்: 
உண்மைக்கிறிஸ்தவர்கள் ஈசா/இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஆவர். குரானில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற படியால், உண்மையான முஸ்லீம்கள் ஈசாவின் போதனைகளைக் கற்று அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும் (சூரா3:48- 49; 5:46). ஈசாவைக் குறித்து குரான் சொல்வது என்ன?

# அல்லா ஈசாவை அனுப்பி, பரிசுத்த ஆவியினால் அவருக்கு உதவி செய்தார்(சூரா.2:87)
# ஈசாவை அல்லா உயர்த்தினார் (சூரா 2:253)
# ஈசா நீதிமானாகவும் மற்றும் பாவமில்லாதவராகவும் இருந்தார்(சூரா 3:46; 6:85; 19:19)
# ஈசா மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் (சூரா 19:33௩4)
# ஒரு மதத்தை ஸ்தாபிக்கும்படி ஈசாவுக்கு அல்லா கட்டளையிட்டார் (சூரா 42:13)
# ஈசா பரலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) ஏறிச் சென்றார்( சூரா 4:157௧58)

வேதாகமம் - இயேசுவின் வார்த்தை 

ஈசாவின் சீடர்களால் இஞ்சிலில்( நற்செய்தி நூல்) அவருடைய போதனைகள் எழுதிவைக்கப் பட்டுள்ளது.ஈசா மற்றும் அவருடைய செய்தியில் நம்பிக்கை வைக்கும்படிக்கு அல்லாவினால் சீடர்கள் ஏவப்பட்டனர் என்று சூரா 5:111 குறிப்பிடுகிறது. அல்லாவின் உதவியாளர்களாக (சூரா 61:6,14), ஈசாவின் சீடர்கள் அவருடைய போதனைகளை துல்லியமாக பதிவுசெய்திருப்பர்.

தோரா(Torah) மற்றும் இன்ஜிலையும் (Gospels) நிலைநிறுத்தி அவ்விரண்டிற்கும் கீழ்படிய வேண்டுமென்றும் குர்ஆன் முஸ்லீம்களுக்கு போதிக்கிறகிறது (சூரா 5:44௪8). நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்குமானால், முகமதுவுக்கு இந்தப் போதனை வழங்கப்பட்டிருக்காது. ஆகவே, முகமதுவின் காலத்தில் இருந்த நற்செய்தி நூல்களின் பிரதிகள் நம்பத்தக்கவையாகவும் துல்லியமானவையாகவும் இருந்தன. முகமது வாழ்ந்த காலத்துக்கும் 450 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் உள்ள நற்செய்தி நூல் பிரதிகள் உள்ளன. மிகவும் பழமையான பிரதிகள், முகமதுவின் காலத்தில் உள்ள பிரதிகள் மற்றும் முகமதுவின் காலத்துக்கு பிந்தினவையாக குறிக்கப்பட்டிருக்கும் கைப்பிரதிகள் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும் போது , நற்செய்தி நூல்களின் அனைத்துப் பிரதிகளும் இயேசு மற்றும் அவருடைய போதனை குறித்த தங்கள் சாட்சியில் முரñபாடற்றவையாக இருக்கின்றன. நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்கின்றன என்று எந்தச் சான்றும் நிரூபிக்க முடியாது. ஆகவே, இயேசுவின் எல்லா போதனைகளும் வேதாகமத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.
இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

நற்செய்தி நூல்கள் உண்மை என்று அறிந்து கொள்ளுதல் போன்ற காரியங்கள் இயேசுவைக் குறித்து என்ன போதிக்கின்றன? இயேசு தான் கொலை செய்யப்பட்டு, மரித்து பின்பு மரித்தோரிலிருந்து எழும்புவேன் என்று கூறி தனது வாழ்வு நிகழ்வுகளை முன் அறிவித்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கிறது (மத்தேயு 20:19). இயேசு முன் அறிவித்ததைப் போலவே அவை நடந்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கின்றன (மத்தேயு 27- 28; மாற்கு 15,16; லூக்கா 23,24; யோவான் 19- 21)

பாவமில்லாத இயேசு கொல்லப்படுவதற்காக தன்னைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் நண்பனுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட பெரிய அன்பு வேறு இல்லை என்று இயேசு சொன்னார் (யோவான் 15:13). தனது தீர்க்கதரிசி தவறாக நடத்தப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் தேவன் ஏன் அனுமதித்தார்? நமக்காக தியாக பலியாக இயேசுவை அனுப்புமளவுக்கு அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 சொல்கிறது.

இயேசு நமது பாவங்களுக்காக பலியானார்

இயேசு நமக்காக தன்னுடைய உயிரை ஏன் தியாகம் செய்யவேண்டும்? இது தான் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஆகும். நம்முடைய தீயச் செயல்களை விட நல்ல செயல்கள் அதிகமாக உள்ளனவா இல்லையா என்பதைப்பார்த்து அல்லா நியாயம் தீர்ப்பார் என்று இஸ்லாம் போதிக்கிறது. தீய செயல்களை விட நற்செயல்களைச் அதிகமாக செய்ய வாய்ப்பு உண்டு என்றாலும் கூட, ஒரே ஒரு பாவத்தை செய்தவனைக் கூட பரலோகத்தில் அனுமதிக்க தேவனால் முடியாது. அவர் அவ்வளவு பரிசுத்தமானவராக இருக்கிறார் (யாக்கோபு2:10)பூரணமற்ற எதையும் பரிசுத்த தேவனால் பரலோகத்தில் அனுமதிக்கமுடியாது. நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் அதனால் நாம் பரலோகத்திற்குள் நுழையமுடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். நாம் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி பூரணமான ஒருவர் நமக்குப் பதிலாக மரித்து நமது பாவக்கடன்களை செலுத்தி தீர்ப்பதே என்பதை தேவன் அறிந்த்திருந்தார். தன்னால் மாத்திரமே அப்படிப்பட்ட மாபெரும் கிரயத்தை செலுத்த முடியும் என்பதை தேவன் அறிந்திருந்தார்.

நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டம்

ஆகவே, தேவன் ஒரு கன்னியிடம் பிறக்கும்படி தமது மகனை அனுப்பினார். தேவன் மரியாளுடன் பெற்றோர்களுக்குரிய உறவு வைத்திருì¸Å¢ø¨Ä. தேவனுடனான அவருடைய உறவு மற்றும் அவருடைய தெய்வீகத்தின் அடிப்படையில், இயேசு தேவகுமாரன் ஆவார்(யோவான் 1:1,14). தனது பாவமற்ற வாழ்க்கை, பரிபூரண செய்தி, பாவத்துக்காக மரணம் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் போன்றவற்றால் இயேசு தன்னை தேவகுமாரன் என்று நிரூபித்தார்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மரணம் ஆகியவை உங்களுக்கு தரும் செய்தி என்ன? பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இயேசுவை தங்கள் இரட்சகராக நம்புபவர்களுக்கு பாவத்திலிருந்த்து மீட்பை தேவன் அருளுகிறார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் (தேவன்) பிதாவினிடத்தில் வரான்". என்று இயேசு சொன்னார். 

தேவனிடம் செல்லும் ஒரே வழி நானே என்பதை இயேசு தெளிவாக போதித்தார். இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பரலோகம் சென்றடைய முடியும். தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவருக்காக வாழ உதவி செய்வார். அத்துடன் நித்திய வாழ்வையும் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசை நாம் எப்படி வேண்டாமென தள்ளிவிட முடியும்? தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுக்குமளவுக்கு நம்மை அன்பு செய்த தேவனை எப்படி ஏற்றுக் கொள்ளாதிருக்க முடியும்?

ஒரு கிறிஸ்தவனாக மாறுதல்

சத்தியத்தைக் குறித்த உறுதி இல்லாதவர்களாக நீங்கள் இருந்தால், பின்வரும் ஜெபத்தை தேவனிடம் கூறுங்கள்: "தேவனே, தயவுசெய்து எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும். தவறாக இருப்பதை கண்டுகொண்டு அதை தள்ளிவிட உதவும். இரட்சிப்புக்கான சரியான வழிக்கு நேராக என்னை நடத்தும்." இப்படிப்பட்ட ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பார்.

இயேசுவை உங்கள் இரட்சகராக நம்பும்படிக்கும், அவரைப் பின்பற்றவும் தேவன் உங்களை நடத்துவாரெனில், இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பை தேவனிடம் கேளுங்கள்.. இங்கே ஒரு மாதிரி ஜெபம் தரப்பட்டிருக்கிறது. " தேவனே, நான் எனது பாவத்தை நேசிப்பதையும், எனது சொந்தக் கிரியைகளின் மூலம் சொர்க்கத்திற்கு சென்றடைய முயற்சிப்பதையும் விட்டுவிடுகிறேன். எனது பாவங்களுக்காக மரிக்கும்படி இயேசுகிறிஸ்துவை அனுப்பினதற்காகவும், அவரை மரித்தோரிலிருந்த்து உயிரோடெழுப்பினதற்காகவும் நன்றி. இயேசுவை நான் எனது சொந்த இரட்சகராக நம்புகிறேன். ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன், என்னை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.