Saturday, January 16, 2016

கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?



கேள்வி: கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

பதில்: 
கடவுள் உயிர் வாழ்கிறாரா? இதை நான் மிகவும் விருப்பத்துடன் கண்டுபிடிப்பதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுதுள்ள கணக்கெடுப்பின்படி 90 சதவிகித ஜனங்கள் கடவுள் உயிரோடிருக்கிறாரென்றும், மேலான ஒரு சக்தி இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் மேல் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை வெளிப்படுத்த பொறுப்புகள் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் வேறு சில காரணங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதோ நிரூபியாமல் இருப்பதோ கூடாத காரியம் நாம் கடவைள விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாதகாரியம். (எபி.11:16) கடவுள் விரும்பினால் அவர் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் அவர் அப்படிச் செய்தால் அவரை விசுவாசிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விடும். (யோ. 20:29)

விசுவாசத்தினால் கடவுளை நம்பவேண்டும் என்று சொல்வதனால், அவர் இருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்று சொல்லிவிட முடியாது. (சங். 19:1-4) நாம் நட்சத்திரங்களைக் காண்பதிலும், அகில உலகத்தையம் காண்பதிலும், இயற்கையின் அதிசயங்களைப் கவனிப்பதிலும், சூரியன் மறைவதின் அழகை ரசிப்பதிலும் இவைகளை படைத்த ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரியச்செய்கிறது. இவைகள் எல்லாம் போதுமானதாக இல்லாவிட்டால், நம்முடைய இருதயங்களிலே, அவர் வாழ்கிறார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. (பிர.3:11) நம்முடைய வாழ்கைக்குப் பின், இதைவிட மேலான ஒரு வாழ்வு இருக்கிறது என்பது தெரிகிறது. அறிவுப்பூர்வமாக ஒருவேளை இதை நாம் மறுக்கலாம். தேவபிரசன்னம் நம்மில் இருந்துகொண்டிருக்கிறது. சிலர் கடவுள் இருக்கிறார்கள் என்பதை மறுக்கிறார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. (சங்.14:1).

வரலாற்றில் முழுவதுமாக பார்க்கும்பொழுது எல்லாக் கலாச்சாரத்திலும், மனித மேம்பாட்டிலும், எல்லாக் கண்டங்களிலும் தேவன் இருக்கிறார் என்பதை 98 சதவிகித ஜனங்கள் நம்புகிறார்கள். இவர்கள் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு ஏதாவது ஒரு தூண்டுதல் இருக்கலாம்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு பரிசுத்த வேத விவாதத்தை தவிர வேறு விவாதங்களும் உள்ளன.

1. ஆன்டோலாஜிக்கல் (Ontological) விவாதத்தின் கருத்துக்களின் அடிப்படையில் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கப்படுகின்றன. “கடவுளைத்தவிர வேறொரு பெரியகாரியம் இருக்க முடியாது. இருப்பது இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் பெரியது. ஆகையால் அந்த பெரியகாரியம் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். கடவுள் இல்லாவிட்டால் அந்த பெரியகாரியம் இருந்திருக்க முடியாது. ஆனால் இது முரன்பாடான கடவுளைக்குறித்த விளக்கம்.

2. டெலிலாஜிக்கல் (Teleological) விவாதம்: உலகம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருப்பதனால், இதனை உருவாக்கிய ஒருவர் இருக்கவேண்டும். உதாரணமாக பூமி சூரியனுக்கு 100 மைல் தூரமாயிருந்தாலும் அருகாமையில் இருந்தாலும். பூமியில் வசிக்கிற மக்கள் உயிர்வாழ முடியாது. நம்முடைய தட்ப வெட்ப நிலையில் சில சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பூமியிலிருக்கிற எல்லா உயிரினங்களும் மரித்துப்போய்விடும். நம் உடம்பிலுள்ள ஒரு அணு உருவாகுவதற்கு அனேக புரத அணுக்கள் தேவை. அதாவது ஒரு அணு உருவாக குறைந்தபட்சம் 10243 புரத மூலக்கூறுகள் தேவை. அதாவது பத்;தோடு(10) 243 பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டும்.

3. காஸ்மோலாஜிக்கல்(Cosmological) விவாதம் : தேவன் இருக்கிறார் என்பதற்கு ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருகாரணம் இருக்கிறதென்று விவாதிப்பவர்கள். உலகமும் அதில் உள்ளயெல்லாம் ஒரு செயல். இவைகளெல்லாம் உருவாகுவதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். காரணமாவதற்கு இறுதியாக எல்லாவற்றையும், எல்லா செயல்களுக்கும் காரணமாயிருக்கிற ஒருவர் இருக்கவேண்டும். அவருக்கு மேலே அவரை உருவாக்குவதற்கு காரணமாக யாருமில்லை. தன்னை உருவாக்க ஒருவருமில்லாமல் இருக்கிறவர் தான் கடவுள்.

4. ஒழுக்கநெறி (Moral) விவாதம் : இது நல்நடத்தையைப் பற்றியது. வரலாற்றில், எல்லாக் கலாச்சார மக்களுக்கும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் தவறு அல்லது சரி என்று உணர்கிற உணர்வு உண்டு. கொலை, பொய், திருட்டு, தவறான நடத்தை இவைகளெல்லாம் எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களும் இது தவறு, இது சரி என்று மறுப்பு தெரிவிக்கிறார்கள். நன்மை எது, தீமை எது என்ற உணர்வு எல்லா மனிதருக்கும் இருக்கிறது. இந்த உணர்வு கடவுளிடத்திலிருந்துதான் வருகிறது. இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் மக்கள் தேவனைக் குறித்த அறிவைமறுத்து பொய்யை நம்புவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவாக சொல்கிறது. (ரோ. 1:25) மக்கள் கடவுளை நம்பாமல் இருப்பதற்கு, எந்த ஒரு கராணத்தையம் கூற முடியாது. (ரோ.1:20) அறிவியல் பூர்வமாக கடவுளை நிரூபிக்க முடியாது என்று அவரை நம்பாமல் இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் தங்களைக் குறித்து அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும், பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும். (ரோ.3:23,6:23) கடவுள் இல்லையென்றால் நாம் நம் விருப்பப்படி நம் மனம்போல வாழலாம். பரிணாமக் கொள்கையைப் பிடித்துக்கொண்டு கடவுளை உதாசினப்படுத்தி வாழ்கிற ஒரு கூட்டம் உண்டு.

கடவுள் உயிரோடிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும் கடுமையான முயற்சியே, கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு நான் கொடுக்கும் இறுதியான விவாதம். கடவுள் இருக்கிறார் என்பது எனக்கு எப்படித்தெரியம்? நான் கடவுளுடன் தினமும் பேசுவதால், அவர் இருக்கிறார் என்பதை அறிகிறேன். அவர் பேசுவதை நான் சத்தமாகக் கேட்பதில்லை ஆனால் அவர் பிரசங்கத்தை, வழிநடத்துதலை, அன்பை, கிருபையை உணர்கிறேன். என் வாழ்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் கொடுக்கிற பொழுது கடவுள் இருக்கிறார் என்பதைத்தவிர, வேறு விளக்கம் கொடுக்க முடியவில்லை. கடவுள் என்மை ஆச்சரியமான விதமாக இரட்சித்து என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். ஆகவே அவரைத்துதித்து அன்பு செலுத்துவதைத்தவிர நான் ஒன்றும் இல்லை என்று உணர்கிறேன்.

இறுதியாக கடவுள் இருக்கிறார் என்பதை விசுவாசத்தின் மூலமாக அறிந்துகொள்கிறோம். (எபி.11:6). தேவன்பேரில் வைக்கும் விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல. விசுவாசம் என்பது ஒரு பாதுகாப்பான, வெளிச்சமான அறையில் அடி எடுத்து வைப்பதாகும். இதில் ஏற்கெனவே 90 சதவிகித மக்கள் இருக்கிறார்கள்.

கிறிஸ்தவம் என்றால் என்ன?



கேள்வி: கிறிஸ்தவம் என்றால் என்ன?

பதில்: 
இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது "கிறிஸ்தவம்" அல்லது "கிறிஸ்தவன்" என்று "வெப்ஸ்டர்" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.

"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.

திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).

நீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


கிறிஸ்தவம் என்றால் என்ன?


இயேசு கிறிஸ்து யார்?



கேள்வி: இயேசு கிறிஸ்து யார்?



பதில்: 
இயேசு கிறிஸ்து யார்? கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு மாறாக ஒரு சிலரே இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ரவேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான கருத்தாகும். இதைக் குறித்த விவாதம் இயேசு கிறிஸ்துவின் முழு அடையாளங்களைக் குறித்து பேசப்பட்டபொழுது தான் துவங்கியது. எல்லா பெரிய மதங்கள் என்று அழைக்கப்படுகிறவைகளுமே இயேசு கிறிஸ்து பெரிய தீர்க்கதரிசி என்றோ அல்லது ஒரு நல்ல போதகர் என்றோ அல்லது ஒரு தேவ மனிதன் என்றோ போதிக்கின்றன. ஆனால் பரிசுத்த வேதாகமம் அவரை தீர்க்கதரிசியிலும் பெரியவர் என்றும். அவரே நல்ல போதகர் என்றும் அல்லது தேவ குமாரன் என்றும் கூறுகிறது.

சி.எஸ்.லூயிஸ், மியர் கிறிஸ்டியானிட்டி (பெறும் கிறிஸ்துவம்) என்ற தமது புஸ்தகத்தில் இப்படியாக எழுதுகிறார். இதன் மூலமாக எந்த ஒருவரும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவே விரும்புகிறேன் அதாவது இயேசு கிறிஸ்துவை ஒரு நல்ல சன்மார்க்க போதகராக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் அவர் தெய்வம் என்று அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை என்ற இந்தக் கருத்து மிகவும் முட்டாள் தனமானது. இதை நாம் அப்படிக்கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. வெறும் மனிதனாக இருக்கும் ஒரு மனிதன். ஓரு மிகப் பெரிய சன்மார்க்க போதகர் சொல்லக் கூடிய கருத்துக்களைப் போல, இயேசு கிறிஸ்து சொன்னதோடு ஒப்பிட முடியாது. அப்படி இயேசு கிறிஸ்துவை ஒப்பிடுகிறவன் புத்தியில்லாத பைத்தியம் பிடித்தவனாக இருக்க வேண்டும் அல்லது அழுகிப்போன முட்டைக்கு சமானமாயிருக்கிற ஒரு மனிதனாக இருக்க வேண்டும் அல்லது நரகத்திற்கு சொந்தக் காராணாயிருக்கிற சாத்தானாக இருக்க வேண்டும். மேற்சொன்ன கருத்தை உடையவர்கள் ஏதாவதொன்றைத் தெரிந்து கொள்ளலாம் ஒன்று மனிதனாக இருந்தவரும் இருக்கிறவருமான தேவகுமாரன் அல்லது பைத்தியம் பிடித்த மனிதன், அதைக் காட்டிலும் கீழான மனநிலையிலிருக்கிறவன். அவன் முட்டாளாயிருக்கிற படியினால் அவனை அடைத்து வைக்கலாம். அவனைக் காரி உமிழலாம். சாத்தான் என்று எண்ணி அவரைக் கொல்லளாம். மாறாக அவனைக் கடவுள் என்று சொல்லி அவனது காலில் விழலாம். ஆகவே இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான முட்டாள் தனத்தை உடைய ஒருவரை ஒரு சிறந்த மனித போதகராக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது நல்லது. ஆனால் இவற்றைச் செய்வதற்குரிய வாய்ப்பை. அவர் நம்மிடத்தில் விட்டு விடுவதில்லை. இப்படிச் செய்ய வேண்டுமென்றும் அவர் விரும்பவில்லை.

அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தன்னை யாரென்று சொன்னார்? பரிசுத்த வேதாகம் அவரைக் குறித்து யாரென்று சொல்கிறது. முதலாவதாக இயேசு கிறிஸ்து (யோ10:3)ல் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். பார்ப்பதற்கு தன்னைக் கடவுளென்று, அவர் சொன்னதாக இவ்வசனத்தில் தெரியவில்லை. அப்படியிருந்தும், அந்த வாக்கியத்துக்கு; யூதர்களின் பிரதிபலிப்பைப் பாரங்கள். 'யூதர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக, நற்கிரியையினித்தமாக நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை - நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால், உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்".(யோ10:33) இந்த வாக்கியம் இயேசு கிறிஸ்து தன்னை தேவனைன்று குறிப்பிட்டதாக சொல்லுகிறது. யூதர்கள் இயேசு கிறிஸ்து தன்னை கடவுளென்று குறிப்பிட்டதை புரிந்து கொண்டார்கள். இதற்கு இயேசு கிறிஸ்து, மறுக்கவோ, மாறுத்தரம் சொல்லவோ இல்லை (யோ8:58) ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நானிருக்கிறேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்'என்றார்". அப்பொழுது அவர் மேல் கல்லெறியம்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள். (யோ8:59) இயேசு தன்னைக் குறித்து குறிப்பிடும் பொழுது, 'நான்" என்று குறிப்பிடுவதை பார்க்கலாம். அது பழைய ஏற்பாட்டில் தேவன் தன்னைக் குறித்து தமது நாமத்தை வெளிப்படுத்தியதிற்கு ஒப்பாயிருக்கிறது.(யாத்3:14) இயேசு கிறிஸ்து கடவுள் என்று சொல்லாவிட்டால், யூதர்கள் அவன் மேல் கல்லெறியும் படி ஏன் கற்களை எடுத்துக் கொண்டார்கள். (யோ1:1) அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று சொல்லுகிறது. (யோ1:16) அந்த வார்த்தை மாம்சமானார் என்று குறிப்பிடுகிறது. இவைகள் இயேசு கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்த கடவுள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா என் ஆண்டவரே, என் தேவனே என்று அழைக்கிறார். (யோ20:28) இயேசுகிறிஸ்து அதைத் திருத்தவில்லை. பரிசுத்த பவுல் அப்போஸ்தலர் இயேசுகிறிஸ்துவைக் குறித்து மகாதேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து (தீத்து2:13)ல் குறிப்பிடுகிறார். பரிசுத்த பேதுரு அப்போஸ்தலனும் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவென்று (2பேதுரு1:1) குறிப்பிடுகிறார். புpதாவாகிய தேவனும், தமது குமாரனுடைய அடையாளத்திற்கு சாட்சி பகருகிறார். தம்முடைய முழு அடையாளத்தைக் குறித்து சாட்சியாக 'ஒ தேவனே உம்முடைய சிங்காசனம் (சங்45:6) தேவனே உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உமது ராஐ;யத்தின் செங்கோல் தகுதியுள்ள செங்கோலாயிருக்கிறது என்று சொல்கிறார். பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனங்கள். கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை வெளிப்படுத்துகிறது. நமக்கொரு பாலகன் பிறந்தார். நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமானவர் ஆலொசனைக் கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா, சமாதானப்பிரபு எனப்படும் (ஏசா9:6).

ஆகவே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நல்ல போதகர் என்று விசுவாசிக்கிறேன் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல என்று ஊ.ளு.லூயில் வாதிடுகிறார். இயேசுகிறிஸ்து தெளிவாக தன்னை மறுக்க முடியாத அளவில் தன்னைக் கடவுளென்று அறிக்கையிடுகிறார். அவர் தேவனாக இல்லாமலிருப்பாரானால் அவர் பொய்யர் ஆகவே, அவர் தீர்க்கதரிசியிலும், போதகரிலும் இருந்து வேறுபடுகிறார். நவீன பண்டிதர்கள். இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையை அபத்தமாக்கும்படியாக. உண்மையான வரலாற்று நாயகனான இயேசு சொன்னதாக வேதாகமம் சொல்கிற அநேக காரியங்களை சொல்லவில்லை என்று கருத்து தெரிவிக்கிறார்கள். ஆண்டவருடைய வார்த்தையைக் குறித்து பேசுவதற்கு, அவர் செய்தார் செய்யவில்லை என்று சொல்வதற்கு நாம் யார்? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பாக இயேசு கிறிஸ்து சொன்ன அல்லது சொல்லாமலிருந்த காரியங்களின் ஆழங்களை அறிந்து கொள்ள இந்த காலத்தில்லுள்ள பண்டிதர்களால் எப்படி அறிந்து கொள்ள முடியும். அவரோடு கூட வசித்த, வாழ்ந்த, ஊழியம் செய்த சீஷர்களாலேயே அவரை அறிந்து கொள்ள முடியவில்லையே (யோ14:26).

இயேசுகிறிஸ்துவின் உண்மையான அடையாளங்களுக்கடுத்த கேள்வி ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது? இயேசுகிறிஸ்து தெய்வமா? இல்லையா? என்பதை ஏன் முக்கியத்துவப்படுத்த வேண்டும்? ஏனென்றல் இயேசு கிறிஸ்து தெய்வமாக இல்லாமல் இருப்பாரேயானால், உலகத்தின் பாவத்திற்கான பரிகாரமாக அவரது இரத்தம் போதுமானதாக இருந்திருக்காது (1யோ2:2) தேவன் மாத்திரமே ஒரு நித்திய பரிகாரத்தை செய்ய முடியும். (ரோமர்5:8, 2கொரி5:21) இயேசு கிறிஸ்து கண்டிப்பாக நமது கடன்களை தீர்த்தே ஆக வேண்டியதிருந்தது. இயேசுகிறிஸ்து மரிக்கும்படியாகவே மனிதனாக வேண்டியதிருந்தது. இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதின் முலமாக மாத்திரமே வருகிறது. அவருடைய தெய்வத்தன்மை என்பது அவரே இரட்சிப்பிற்கு ஒரே வழி என்பதுவே ஆகும். ஆகவே இயேசுகிறிஸ்து 'நானே வழியும், சத்திமும் ஐPவனுமாயிருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரன்" (யோ14:6) என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறது. அவரது தெய்வத்தன்மையை விளக்குவதற்கு போதுமானது ஆகும்.

Friday, January 15, 2016

baptized


Praise the Lord; we baptized this brothers and sisters on 15/01/2016 thaipongal day in the name of Holy Father, holy son and Holy Spirit Mtt 28:18-20. And totally they have committed their life to the Jesus Christ. All glory to the God.













எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது?

 
நாம் உண்ணும் போது தவறான உணவு சேர்க்கையால் சில வித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
உதாரணத்திற்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் அதனுடன் இஞ்சி சாப்பிடக்கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் புட் பாய்சன் ஆகிவிடும்.
தர்பூசணி மற்றும் பால்
தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
பப்பாளி மற்றும் தண்ணீர்
பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.
முட்டை மற்றும் பால்
இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.
பால் கலந்த ஓட்ஸ்
பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும். நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்துவிடும்.
மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இந்த உணவு சேர்க்கைகளைத் தவிர்த்திடுங்கள்.
வாழைப்பம் மற்றும் பால்
வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.
மீன் மற்றும் பால்
மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால், அதனால் உடலில் உள்ள இரத்த பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.

Thursday, January 7, 2016

கிறிஸ்துவில் வளர 7 வழிகள்

tamil christian message, tamil christian book
பெற்றெடுக்கும் பிள்ளையிலிருந்து, புதிதாய் நடும் ரோஜா செடி வரை அனைத்திலும் வளர்ச்சியை எதிர்பார்ப்பது மனிதனுடைய நியாயமான ஆசை! அதுபோல கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு புது விசுவாசியும் கிறிஸ்தவ வாழ்வில் வளர வேண்டுமென்பது தேவனுடைய விருப்பம். இப்படி கிறிஸ்துவில் வளருவதற்கான வழிகளை ஒரு பக்தன் பின்வருமாறு விளக்குகிறார்.
1. விட வேண்டிய கெட்டவழிகளை அதிக பிரயாசத்தோடும், தேவ ஒத்தாசையோடும் விட்டுவிட வேண்டும். இதற்காக உபவாசமிருக்கவும் தயங்கக்கூடாது.
2.உங்களுடைய வழிகள் கர்த்தருடைய வழிகள்தானா என்பதை ஆராய்ந்து பாருங்கள். கர்த்தருடைய வழியில் உத்தமமாய் நடக்க உள்ளத்தின் ஆழத்தில் திட்டமான தீர்மானமெடுங்கள்.
3. ஜெபக்கூட்டங்கள் மற்றும் ஆராதனைகளில் அதிகமாய் கலந்துகொள்ள பிரயாசமெடுங்கள்.
4. அந்தரங்கத்தில் ஜெபிக்கும் தனி ஜெப வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதிகாலை வேளையே தியானத்திற்கும் ஜெபத்திற்கும் ஏற்றது.
5. தேவ சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுங்கள். நானல்ல கிறிஸ்துவாகிய நீரே என்னில் பெருக வேண்டுமென்று மன்றாடுங்கள்.
6. கிறிஸ்துவின் சாயல் உங்களில் வளரட்டும். கிறிஸ்துவின் சுபாவங்கள் உங்களில் பெருகட்டும். அவரது குணாதிசயங்கள் உங்களது வாழ்வில் காணப்படட்டும்.
7. உங்களுக்கென்று ஒரு ஊழியத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். ஜெப ஊழியமோ, கைப்பிரதி கொடுப்பதோ, வியாதியஸ்தரை சந்திப்பதோ, சிறைச்சாலை ஊழியமோ எதுவானாலும் உற்சாகமாய் கர்த்தருக்கென்று செய்யுங்கள்.
பிரியமானவர்களே! மேற்கண்ட எளிய ஆனால் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய இந்த காரியங்களை பின்பற்றுவோமானால் நாம் கிறிஸ்துவுக்குள் வளர்வது உறுதி. வளர்வதோடு மாத்திரமல்ல கனி கொடுக்கவும் முடியும். ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் வருடக்கணக்கில் பெயர் கிறிஸ்தவராய் வாழ்ந்து விட்டீர்களோ? இனியும் தாமதிக்க வேண்டாம். இன்றே மனம் திரும்புங்கள். வளர வேண்டிய வழியை அறிந்துகொண்ட பின்பும் மனம் கடினமாயிருக்க வேண்டாம்.
- See more at: http://www.christsquare.com/devotion/id050116#sthash.cTqdfWgT.PM3NtcPp.dpuf